யாழ் போதனா வைத்தியசாலையில் தொடரும் மரணங்கள்…

நெடுந்தீவைச் சேர்ந்த கில்மன் நோபட் தர்சிகாமேரி என்ற இளம் தாய் நேற்றையதினம் (ஒக். 09) இரவு யாழ் போதனா வைத்தியசாலையில் பிரசவத்தின் போது மரணமடைந்துள்ளதாக உறவினர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இறப்புக்கான சரியான காரணம் சம்பவம் நிகழ்ந்த நேரம் என்பன வைத்தியசாலையில் தெரிவிக்கப்படாமையால் உடலத்தை ஏற்க உறவினர்கள் மறுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவ்வாறான சம்பவங்கள் யாழ் போதனா வைத்தியசாலையில் தொடரும் நிலை கவலையானது.