செம்மணியில் மீட்கப்பட்ட மனித புதை குழி குறித்து சர்வதேச நீதி வேண்டும்!

செம்மணியில் மீட்கப்பட்ட மனித என்பு கூட்டுத்தொகுதிகளை சர்வதேச நிபுணர்கள் மூலம் மரபணு பரிசோதனைகளுக்கு உட்படுத்தி தங்களுக்கான நீதி கண்டறியப்பட வேண்டும் என காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர் சங்கத்தினால் தெரிவிக்கப்பட்டுள்ளது

நேற்றைய  (05-10-2025) தினம் கிளிநொச்சியில் நடைபெற்ற குறித்த ஊடக சந்திப்பில் வடக்கு கிழக்கு வலிந்து கானாமல் ஆக்கப்பட்டவர்களின் சங்கத்தின் செயலாளர் சிவானந்தன் ஜெனிரா மேற்கண்டவாறு தெரிவித்துள்ளனர்

தொடர்ந்து குறிப்பிடுகையில் கடந்த 2009 ஆம் ஆண்டு முதல் காணாமல் ஆக்கப்பட்ட தங்களுடைய உறவுகளுக்கு நீதி கோரி தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற தாங்கள் இலங்கையில் கடந்த ஆட்சியாளர்களால் தொடர்ந்து ஏமாற்றப்பட்டு இருக்கின்றோம்.

அந்த அடிப்படையிலேயே உள்நாட்டு பொறி முறை ஒன்றை எதிர்த்து சர்வதேச தரத்திலான ஒரு பொறி முறை ஊடாகவே தங்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்ற கோரிக்கையை தொடர்ச்சியாக முன்வைத்து வருகின்றோம் அதே நேரம் நாளைய தினம் யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கின்ற போராட்டத்திணை தாம் முற்றாக நிராகரிக்கின்றனர் என்று குறிப்பிட்டுள்ளனர்.