“பாலத்தீனத்தை அங்கீகரித்ததற்கு இஸ்ரேல் பழிவாங்க கூடாது” : பிரித்தானியா தெரிவிப்பு

பாலத்தீனத்தை தனி நாடாக பிரித்தானியா அங்கீகரித்ததை பதிலடி தரும் விதமாக மேற்குக் கரையின் சில பகுதிகளை இஸ்ரேல் இணைக்கக் கூடாது என பிரித்தானிய வெளியுறவுச் செயலாளர் யெவெட் கூப்பர் தெரிவித்துள்ளார்.

நியூயார்க்கில் நடக்கவுள்ள ஐநா பொதுச்சபையில் கலந்துகொள்வது பற்றி சர்வதேச ஊடகமான பிபிசியிடம்  கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இங்கு பிரான்ஸ் மற்றும் ஐரோப்பிய நாடுகளும் இந்த அறிவிப்பை வெளியிட உள்ளது. இந்த அறிவிப்பால் மேற்குக் கரையின் சில பகுதிகளை இஸ்ரேல் இணைக்கும் என கவலைப்படுகிறீர்களா? எனக் கேட்டபோது, இஸ்ரேல் அரசாங்கம் இதைக் செய்யக்கூடாது என இஸ்ரேலிய பிரதிநிதியிடம் தெளிவுபடுத்தியுள்ளதாக தெரிவித்தார்.

மேலும், “நாங்கள் எடுத்துள்ள இந்த முடிவு பாலத்தீன பாதுகாப்பை மட்டுமல்ல, இஸ்ரேலிய பாதுகாப்பை கருத்தில்கொண்டு எடுக்கப்பட்டது” என்றார்.