இஸ்ரேலில் சிக்கியுள்ள இலங்கையர்கள் தொடர்பில் கலந்துரையாடல்!

இலங்கையுடனான ஒத்துழைப்பை வலுப்படுத்த இஸ்ரேல் பாராளுமன்றத்தில் நிறுவப்பட்ட பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின் இரண்டாவது கூட்டத்தில் செல்லுபடியாகும் விசாக்கள் இல்லாமல் இஸ்ரேலில் வசிக்கும் இலங்கையர்களின் பிரச்சினை குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.

அதன்படி, இந்த விவகாரம் இஸ்ரேல் பாராளுமன்றத்தின் வெளிநாட்டு தொழிலாளர்கள் குழுவுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேலுக்கான இலங்கை தூதர் நிமல் பண்டா தெரிவித்தார்.
இந்த குழுவின் அடுத்த அமர்வில் இந்த விடயம் குறித்து அவதானம் செலுத்தப்படும் என்று அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

இந்த கவலை இலங்கையர்களுக்கும் அப்பால் பிற வெளிநாட்டினரையும் பாதிக்கிறது என்று அவர் குறிப்பிட்டார். இதனிடையே விசா விடயத்துக்கும் மேலதிகமாக, இலங்கை பாராளுமன்ற அதிகாரிகளுக்கு இஸ்ரேலில் பயிற்சி வாய்ப்புகளை வழங்குவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் இந்த கூட்டத்தில் ஆராயப்பட்டுள்ளது.