இஸ்ரேல் மீது கடும் நடவடிக்கை – கட்டார் எச்சரிக்கை

கத்தாரில் ஹமாஸ் அமைப் பினரின் தலைவர்களை குறிவைத்து இஸ்ரேல் மேற் கொண்ட தாக்குதல் அரச பயங்கர வாதம், எனவே இஸ் ரேலியஆக்கிரமிப்புக்கு “கூட்டு பதில்” இருக்க வேண்டும் என்று கட்டார் பிரதமர் ஷேக் முகமது பின் அப்துல்ரஹ்மான் அமெரிக்க செய்தி நிறுவனமான CNN இற்கு தெரிவித்துள்ளார்.
“பிராந்தியத்திலிருந்து ஒரு பதில் வரும். இந்த பதில் தற்போது பிராந்தியத்தில் உள்ள மற்ற கூட் டாளிகளுடன் ஆலோசனை மற்றும் விவாதத்தில் உள்ளது” என்று ஷேக் முகமது கூறினார்.
“இந்த வன்முறைகளை தொடர்வதிலிரு ந்து இஸ்ரேலைத் தடுக்கும் அர்த்தமுள்ள  நட வடிக்கை ஒன்றை நாங்கள் எதிர்பார்க்கிறோம்” என்று அவர் கூறினார்.
இஸ்ரேலிய தாக்குதலுக்குப் பிறகு கத்தார் மக்கள் விரும்புவது  பிராந்தியத்திலிருந்து வரும் கூட்டான பதிலையே – மேலும் பல்வேறு வளைகுடா நாடுகள் கத்தாரின் பதிலையே எதிரொலிப்பதால், ஒரு கூட்டு பதில் நடவடிக்கை சாத்தியமானதே.
இந்த தாக்குதலுக்கு பின்னர் குவைத் பட்டத்து இளவரசர், ஜோர்டான் பட்டத்து இளவரசர் மற்றும் எமிராட்டி ஜனாதிபதி அனைவரும் கத்தாருக்குச் சென்றுள்ளனர். சவுதி பட்டத்து இளவரசரும் அங்கு சென்றதும் கூட்டு பதில் நடைவடிக்கை தொடர்பாக ஆராயப் படவுள்ளது.
தோஹாவில் நடந்த தாக்குதலில் ஹமாஸ் அமைப்பினரின் மூத்த தலைவர்கள் யாரும் கொல்லப்பட்டவில்லை என ஹமாஸ் தெரிவித்துள்ளபோதும், அதன் 5 உறுப்பினர்கள் உட்பட 6 பேர் இந்த தாக்குதலில் கொல்லப் பட்டிருந்தனர். 10 இற்கு மேற்பட்ட இஸ்ரேலிய விமானங்கள் கடந்த செவ் வாய்க் கிழமை(8) 14 குண்டுகளை ஹமாஸ் அமைப்பினரின் பேச்சு வார்த்தைக் குழுவினர் இருந்த கட்டி டம் மீது வீசியிருந்தன.