இஸ்ரேலின் போரில் இங்கிலாந்தின் பங்கு –  ஜெர்மி கோர்பின் தலைமையிலான விசாரணை

முன்னாள் தொழிலாளர் கட்சித் தலைவர் ஜெரமி கோபின் தொகுத்து வழங் கும் காசா மீதான இஸ்ரேலின் போரில் இங்கிலாந்தின் பங்கை ஆராயும் நிகழ்வு லண்டனில் கடந்த வாரம் ஆரம்பித்து தொடர்ந்து நடை பெற்று வருகின்றது..
“பாலஸ்தீன மக்களின் துன் பம் நீண்ட காலமாகவே தொடர் கிறது, ஆனால் அக்டோபர் 2023 முதல் இடம்பெற்றுவரும் தாக்கு தல்களில் அங்கு  63,000 பேர் இறந்துள்ளனர், மேலும் குழந்தை கள் பட்டினியால் இறப்பதை தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பி வருகிறோம்,” என்று கோர்பின் “தி காசா தீர்ப்பாயம்” நிகழ்ச்சியில் தனது தொடக்க உரை யில் தெரிவித்துள்ளார்.
“நாடாளுமன்ற உறுப்பினர் களாக எங்கள் வேலை மற்றும் குடிமக்களாக எங்கள் அரசாங்க வேலை என்பது, என்ன நடக்கிறது என்பதற்கு எங்களை பொறுப்பேற்க வைப்பது,” என்று கோர்பின் கூறினார், தற்போது ஒரு புதிய இடதுசாரிக் கட்சியைத் தொடங்கும் சுயேச்சை நாடாளுமன்ற உறுப்பினராக அவர் உள்ளார்.
இதனிடையே, லண்டன் குயின் மேரி பல்கலைக்கழகத்தின் மனித உரிமைகள் சட்டப் பேராசிரியரும், பிரிட்டிஷ் மத்திய கிழக்கு ஆய்வுகளுக்கான சங்கத்தின் துணைத் தலைவருமான நீவ் கார்டன், முறைசாரா காசா தீர்ப்பாயத்தில் முதன்முதலில் பேசியவர்களில் ஒருவர்.
இந்த நிகழ்வில் பங்கேற்பதற்கான தனது உந்துதல் அவரது வளர்ப்பிலும், யூத மதத்தில் தனது குழந்தைப்பருவ மதபோதனைகளிலிருந்து அவர் கற்றுக்கொண்ட பாடங்களிலும் வேரூன் றியுள்ளது, நீதி என்பது ஒரு மையக்கருப் பொரு ளாக இருந்தது, நியாயமான வழி முறைகள் மூலம்  என்று கோர்டன் தெரிவித்துள் ளார்.
“இந்த தீர்ப்பாயத்தின் முக்கியப் பாத்தி ரங்களில் ஒன்று … திறந்த கண்களால் யதார்த் தத்தைப் பார்ப்பதும், நீதியைப் பின்தொடர்வதில் உண்மையைப் பேசுவதும் ஆகும்,” என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்..
அதேசமயம் 2023 அக்டோபரில் இஸ்ரேல் போர் தொடங்கியதிலிருந்து காசாவில் குறைந் தது 370 பாலஸ்தீனியர்கள் பட்டினியால் இறந்து ள்ளனர், இதில் 131 குழந்தைகள்  என்று காசாவின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.