”காஸா மக்களை வெளியேற்றுவது தவிர்க்க முடியாதது.” – இஸ்ரேல் திட்டவட்டம்!

காஸாவை விட்டு மக்களை வெளியேற்றுவது தவிர்க்க முடியாதது என இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. போர் அடுத்த கட்டத்திற்குச் செல்லும் முன் வடக்கு காஸாவில் உள்ள மக்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என்று தெரிவித்துள்ள இஸ்ரேல் இராணுவம், தெற்கு காஸாவிற்கு இடம்பெயரும் குடும்பங்களுக்கு அங்கே அதிகமான நிவாரண உதவிகள் கிடைக்கும் என்றும் தெரிவித்துள்ளது.
காஸாவில் இஸ்ரேல் படைகள் தரைவழித் தாக்குதலைத் தீவிரப்படுத்தி வரும் நிலையில், வடக்கு காஸாவில் தங்கியிருந்த மக்கள் அப்பகுதியை விட்டு வெளியேறி வருகின்றனர்.