காஸாவில் இஸ்ரேலிய பணையக்கைதிகளை விடுவிக்கவும், தங்களது நாடு முன் வைத்த நிபந்தனைகளின் கீழ் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கும் இஸ்ரேல் உடனடியாக பேச்சுவார்த்தைகளைத் தொடங்கும் என அந்நாட்டின் பிரதமர் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
காஸாவை கைப்பற்றி ஹமாஸைத் தோற்கடிப்பதே தங்கள் இலக்கு என்றும் கூறியுள்ளார். தற்போது சுமார் 60,000 இஸ்ரேலிய வீரர்களை காஸாவில் களமிறக்கி தரைவழித் தாக்குதலைத் தொடங்கியுள்ளது இஸ்ரேல். இதில் குறைந்தது 45 பேர் கொல்லப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.