இஸ்ரேல் தாக்குதலில் 5 அல்ஜசீரா ஊழியர்கள் உயிரிழப்பு!

Mourners attend the funeral of Palestinian journalist Ahmed Al-Louh

காஸாவின் அல்- ஷிஃபா மருத்துவமனைக்கு அருகே இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் நிருபர் அனஸ் அல்-ஷரீஃப் உட்பட அல்ஜசீரா செய்தி ஊடகத்தின் 5 ஊழியர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

இது குறித்து இஸ்ரேல் இராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஹமாஸின் ஒரு ஆயுதப் பிரிவை அல்- ஷரீஃப் வழிநடத்தியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இஸ்ரேலின் இந்த அறிக்கையை அல்ஜசீரா நிறுவனம் முற்றிலுமாக மறுத்துள்ளது.

2022ம் ஆண்டு காசாவில் இஸ்ரேலின் தாக்குதல்களால் கிட்டத்தட்ட 270 பத்திரிகையாளர்களும் ஊடக ஊழியர்களும் கொல்லப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.