இந்தியாவிற்கு எதிராக மேலும் அதிக தடைகள் – ட்ரம்ப் சபதம்

ரஷ்யாவிலிருந்து எண்ணெய் கொள்முதல் செய்ததற்காக புது டில்லி கூடுதல் அபராதங்களை எதிர்கொள்ள வாய்ப்புள்ளது என்று அமெரிக்க தலைவர் டொனால்ட் ட்ரம்ப் கடந்த வியாழக்கிழமை (7) தெரிவித்துள்ளார்.
இந்தியாவிற்கு எதிராக “இன் னும் நிறைய” தடைகளை விதிக்க ட்ரம்ப் சபதம் செய்திருக்கிறார். ரஷ்யாவிலிருந்து எண்ணெய் கொள்முதல் செய்ததற்காக இந்தியா “இன்னும் நிறைய” தடைகளை எதிர் கொள்ள நேரிடும் என்று ட்ரம்ப் கூறியுள்ளார். அவை இரண் டாம் நிலை வரிகளின் வடிவத்தில் இருக்க லாம் என்பதைக் குறிக்கிறது.
ரஷ்யாவுடனான அதன் தொடர்ச்சியான எரிசக்தி வர்த்தகத்திற்காக தெற்காசிய நாட்டிற்கு கூடுதலாக 25% வரிகளை விதிக்கும் உத்தரவில் டிரம்ப் கையெழுத்திட்ட சில மணி நேரங்களுக்குப் பிறகு, அவரது அறிக்கை வந்துள்ளது.
“8 மணி நேரம் மட்டுமே ஆகிறது. எனவே என்ன நடக்கிறது என்று பார்ப்போம். நீங்கள் இன்னும் நிறைய பார்க்கப் போகிறீர்கள்” என்று டிரம்ப் தெரிவித்துள்ளார்.இரண்டாம் நிலைத் தடைகள் என்பது, தடை செய்யப்பட்ட ஒரு நாட்டோடு தொடர்பு கொள்ளும் மூன்றாம் தரப்பினரை குறிவைத்து, தடை விதிக்கும் நாட்டின் சந்தையை அவர்கள் அணுகுவதைக் கட்டுப்படுத்தும் நோக்கத்துடன், அவர்களை குறிவைக்கும் தண்டனைகள் ஆகும்.
“இதனிடையே, எங்களைப் பொறுத்த வரை, விவசாயிகளின் நலனே எங்கள் முதல் முன்னுரிமை” என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை (7) தடைகள் தொடர்பாக பேசும் போது தெரிவித்துள்ளார். “விவசாயிகள், மீனவர்கள் மற்றும் பால் உற்பத்தியாளர்களின் நலன்களில் இந்தியா ஒருபோதும் சமரசம் செய்யாது. அதற்கு நாம் அதிக விலை கொடுக்க வேண்டியிருக்கும் என்பது எனக்குத் தெரியும், நான் தயாராக இருக்கிறேன். இந்தியா அதற் குத் தயாராக உள்ளது” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, அமெரிக்காவின் இந்த நடைமுறைக்கு பதிலடியாக, சீனாவில் நடைபெறவுள்ள சங்காய் கூட்டமைப்பின் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சீனா பயணம் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு அவர் அங்கு செல்வது குறிப்பிடத்தக்கது.