உத்தராகண்ட் மேக வெடிப்பு: 100க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதாக தகவல்

இந்தியாவுன் உத்தராகண்ட் மாநிலத்தில் நேற்று (ஆகஸ்ட் 5) மேக வெடிப்பு காரணமாக ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளனர், 100க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர்.

தேசிய பேரிடர் மீட்புக் குழுவின் டிஐஜி மோஹ்சென் ஷாஹிதி ஏஎன்ஐ செய்தி முகமையிடம், ” 40 முதல் 50 வீடுகள் அடித்துச் செல்லப்பட்டன. இதில் 100க்கும் மேற்பட்டோரை காணவில்லை” என்று கூறினார்.

கடந்த சில வாரங்களாக உத்தராகண்ட் மாநிலத்தில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், கங்கோத்ரி பகுதியில் நேற்று பிற்பகலில் மேகவெடிப்பு ஏற்பட்டது. இதனால் கீர் கங்கா நதியில் திடீரென பெருவெள்ளம் ஏற்பட்டு தரளி கிராமத்தை நோக்கி சீறிப் பாய்ந்தது. இதில் ஒட்டுமொத்த கிராமமும் பெருவெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. இராணுவம், விமானப்படை, தேசிய பேரிடர் மீட்புப் படை, மாநில பேரிடர் மீட்புப் படை, தீயணைப்பு படை மற்றும் காவல் துறையை சேர்ந்த நூற்றுக்கணக்கான வீரர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.