சீனாவுடன் உறவை வளர்க்க இந்தியா விருப்பம்

புது தில்லிக்கும் பெய்ஜிங் கிற்கும் இடையிலான உறவு கள் முன் னேற்றம் அடைவதற்கான அடையாளமாக, ஐந்து ஆண்டு இடைநிறுத்தத்திற்குப் பிறகு சீன மக்களுக்கு சுற்றுலா விசா வழங்கு வதை மீண்டும் ஆரம்பிப்பதாக இந்தியா தெரிவித்துள்ளது.
கோவிட்-19 தொற்றுநோ யின் ஆரம்பக் கட்டங்களில் இந்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட் டன. மேலும், 2020 இல் இமய மலையில் ஏற்பட்ட ஒரு கொடிய எல்லை மோதலால் நாடுகளுக் கிடையேயான உறவுகள் பாதிக் கப்பட்ட பின்னரும், இந்த கட்டுப் பாடுகள் தொடர்ந்தன.
“ஜூலை 24, 2025 முதல் சீன குடிமக்கள் இந்தியாவுக்கு வருகை தர சுற்றுலா விசாவிற்கு விண்ணப்பிக்கலாம்” என்று இந்திய தூதரகம் சீன சமூக ஊடக தளமான வெய்போவில் தெரிவித்துள்ளது. 2020 இல் இடைநிறுத்தப்பட்ட இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான நேரடி விமானங் களை மீண்டும் தொடங்குவதோடு, அதன் குடிமக்களுக்கு விசா வழங்குவதை மீண்டும் தொடங்குமாறு பெய்ஜிங் நீண்ட காலமாகக் கோரியுள்ளது.
“எல்லை தாண்டிய பயணத்தை எளி தாக்குவது பரவலாக நன்மை பயக்கும்” என்று சீன வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. கசானில் நடைபெற்ற 2024 பிரிக்ஸ் உச்சிமாநாட்டின் போது, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு, இரு நாடு களுக்கும் இடையிலான உறவுகளை இயல் பாக்குவதற்கான முயற்சிகள் கடந்த ஆண்டு அக்டோபரில் ஆரம்பித்தன. பதற்றமான பகுதி களிலிருந்து விலகுவதற்கும், உறவுகளை மீட் டெடுப்பதற்கான உறுதிப்பாட்டிற்கும் இரு தலைவர்களும் ஒப்புதல் அளித்தனர்.
பல சுற்று இராணுவ மற்றும் இராஜ தந்திர பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து, இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான வர்த்தகம் மற்றும் முதலீட்டு கட்டுப்பாடுகளை தளர்த்துவதற்கான சில திட்டங்கள், வர்த்தகத் துறையின் அழுத்தங்களினால் நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளன.
இந்த மாத தொடக்கத்தில், சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி, பெய்ஜிங்கில் இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கருடன் நடந்த சந்திப்பில், “2024 அக்டோபரில் எங்கள் தலைவர்கள் சந்தித்ததிலிருந்து உறவு படிப்படியாக நேர்மறையான திசையில் நகர்ந்து வருகிறது” என்று தெரிவித்திருந்தார்.
ஜூன் மாதம், இந்து மதத்தின் புனித யாத்திரைகளில் ஒன்றான கைலாஷ்-மானசரோவர் யாத்திரைக்காக, இந்தியர்கள் குழு திபெத்திற்குச் சென்றது. இரண்டு புனித தலங்களைக் கடந்து செல்லும் இந்த யாத்திரை, ஐந்து வருட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் தொடங்கப்பட்டது.