புதிய அரசியலமைப்பை உருவாக்குவதாக அரசாங்கம் அறிவிப்பு

புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கான ஆரம்ப நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

பிரதமர் ஹரிணி  இன்று (25) பாராளுமன்றத்தில் இதனை தெரிவித்தார்.பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேரா எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், தற்போதைய அரசாங்கத்தின் பதவிக்காலம் முடிவடைவதற்கு முன்னர் புதிய அரசியலமைப்பு அறிமுகப்படுத்தப்படும் என்று குறிப்பிட்டார்.