பாகிஸ்தானில் வெள்ளம்: 150 பேர் உயிரிழப்பு

பாகிஸ்​தானில் மழை, வெள்ள பாதிப்​பு​களால் கடந்த 3 வாரங்​களில் 150-க்​கும் மேற்​பட்​டோர் உயி​ரிழந்​துள்​ளனர்.

பாகிஸ்​தானில் பஞ்​சாப், கைபர் பக்​துன்​வா, ஜில்​ஜிட்​-​பால்​டிஸ்​தான் உள்​ளிட்ட பகு​தி​களில் கடந்த சில வாரங்​களாக கனமழை பெய்து வரு​கிறது. தலைநகர் இஸ்​லா​மா​பாத், இராணுவ தலை​மையக​மான ராவல்​பிண்டி உட்பட பல்​வேறு நகரங்​கள், கிராமங்​கள் வெள்​ளத்​தில் மூழ்கி உள்​ளன.ஜீலம், சிந்​து, சட்​லஜ், ஜில்​ஜிட், ஸ்வாட் உள்​ளிட்ட நதி​களில் வெள்​ளம் பெருக்​கெடுத்து ஓடு​கிறது. கனமழை காரண​மாக பாகிஸ்​தானின் பஞ்​சாப் மாகாணம் முழு​வதும் அவசர நிலை அமல் செய்​யப்​பட்டு இருக்​கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், பாகிஸ்​தானின் பொருளா​தா​ரம் மிக மோச​மாக பாதிக்​கப்​பட்டு இருக்​கிறது. அந்த நாட்டு மக்​கள் தொகை​யில் 50 சதவீதத்​துக்​கும் மேற்​பட்​டோர் குடிசை வீடு​களில் வசிக்​கின்​றனர். இதன் ​காரண​மாக இயற்கை பேரிடரின்​போது பெரும் பாதிப்​பு​கள் ஏற்​படு​கின்​றன. பரு​வநிலை மாறு​பாட்டை சமாளிக்க பாகிஸ்​தான் அரசு போதிய நடவடிக்​கைகளை எடுத்​தால் மட்​டுமே வெள்ள பாதிப்​பு​களில் இருந்து மக்​களை காப்​பாற்ற முடி​யும். இவ்​வாறு சர்​வ​தேச சுற்​றுச்​சூழல்​ ஆர்​வலர்​கள்​ தெரிவித்​துள்​ளனர்​.