செம்மணி இனவழிப்புக்கான ஆதாரம் அடுத்து என்ன? – விதுரன்

செம்மணி மனித புதைகுழி யிலிருந்து இது வரையில் 65 எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ள நிலை
யில் அதன் இரண்டாம் கட்ட அகழ்வு பணிகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டு, எதிர்வரும் 21ஆம் திகதி முதல் மீண்டும்  அகழ்வுப் பணிகளை முன்னெடுப்பதற்கு உத்தேசிக்கப்பட்டுள் ளது.
இந்தாண்டின் கடந்த பெப்பர வரி மாதம் 18ஆம் திகதியன்று அவசர நிர்மாணிப்பு பணிகளை முன் னெடுத்த போது முதற்தடவையாக எலும்புக் கூடுகள் இருப்பது அடையாளம் காணப் பட்டது. அந்த நாளில் இருந்து செம்மணி சித்துப்பாத்தி பகுதியில் தொடர்ச்சியாக அகழ்வுகள் மேற்கொள்ளப்பட்டன.
முதலாம் கட்டத்தில் ஒன்பது நாட்கள் அகழ்வுப்பணிகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. இரண்டாம் கட்டத்தில் 15நாட்கள் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. அதில் ‘தடயவியல் அகழ்வாய்வுத்தளம் இலக்கம் – 01’  மனித புதைகுழியில் இருந்து 63 எலும்பு கூடுகளும் ,  ‘தடயவியல் அகழ்வாய்வுத்தளம் இலக்கம் – 02’  மனித புதைகுழியில் இருந்து இரண்டு எலும்பு கூடுகளும் மீட்கப்பட்டுள்ளன.
அதேவேளை  ‘தடயவியல் அகழ்வாய்வுத் தளம் இலக்கம் – 02’  புதைகுழியில் குழப்பகரமான முறையில் மனித எலும்பு சிதிலங்கள் காணப் படுவதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.அத்துடன் குறித்த  இரு புதைகுழிகளில் இருந்து மீட்கப்பட்ட, பை, காலணிகள், கண்ணாடி வளையல்கள், ஆடையை ஒத்த துணிகள், பொம்மை உள்ளிட்ட பொருட்கள் சான்று பொருட் களாக அடையாளப்படுத்தப்பட்டு, நீதிமன்ற கட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளன.
யாழ்.நீதிவான் நீதிமன்ற நீதிபதி ஆனந்தராஜா, மேற்பார்வையில் பேராசிரியர் ராஜ் சோமதேவ அகழ்வுப்பணிகளை முன்னெடுத் திருந்ததோடு யாழ்.போதனா வைத்தியசாலையில் சட்ட வைத்திய அதிகாரி பிரதாபனும் எலு ம்புக்கூடுகள் மீட்டு மன்றும் பாதுகாத்தல் செயற்பாடுகளில் கணிசமான வகிபாகத்தினைக் கொண்டிருக்கின்றார்.
அதேவேளை, செம்மணி மனிதப் புதை குழி சம்பந்தமான வழக்கு மீதான விசாரணை எதிர்வரும் 25ஆம் திகதி விசாரணைக்கு எடுத் துக்கொள்ளப்படவுள்ளது. இந்த வழக்கில் நீதி மன்றின் நிலைப்பாடு மிக முக்கியமானதாக உள்ளது.
\ஏனென்றால், தற்போதைய நிலையில், செம்மணி மனிதப் புதைகுழி சம்பந்த மான பல்வேறு தரப்பட்ட பார்வைகள் வெளிப் படுத்தப்பட்டு வருகின்றன. மனிதப்புதைகுழியை மலிப்படுத்து வதற்கும் நடவடிக்கைகள் எடுக்கப் பட்டுள்ளன.
அவ்வாறான பின்னணியில், செம்மணி மனிதப்புதைகுழி சம்பந்தமாக நீதிமன்றம் தனது நிலைப்பாட்டை உறுதியாக வெளிப்படுத்தும் பட்சத்தில் அடுத்தகட்டச் செயற்பாடுகளுக்கு பேருதவியாக இருக்கும்.
விசேடமாக, ஆட்சிப்பீடத்தில் உள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையி லான தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் செம்மணி விடயத்தில் நழுவல் போக்கையே கடைப்பிடிக் கின்றது.
அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸவும், நீதி அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷண நாணயக்காரவும் அகழ்வுப்பணிகளுக்கு அரசாங்கம் முழுமையாக ஒத்துழைக்கும் என்றும், நீதிமன்ற வழக்கு காணப்படுவதால் நீதித்துறையே அவ்விடயத்தின் அடுத்தகட்டம் சம்பந்தமாக தீர்மானிக்கும் என்று கூறி நழுவிக் கொள்கின்றார்கள்.
அகழ்வுப்பணிகளை தொடர்ச்சியாகவும், துரிதமாகவும் முன்கொண்டு செல்வதற்கு நிதி ஒதுக்கீடு உட்பட இதர வசதிகளை வழங்கு வதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் என்ற வகையில் முன்னெடுப்பதற்கு தயாராக இல்லை.
வங்குரோத்தான பொருளாதார நிலைமைக ளைக் கொண்ட நாட்டில் ஆட்சியில் உள்ள அரசாங்கத்தினால் செம்மணி மனிதப் புதைகுழி உட்பட நாட்டில் காணப்படும் எந்தவொரு மனித புதைகுழியையும் முழுமையாக அகழ்வாராய்ச்சி செய்வதற்கான இயலுமை இருக்காது என்பது யதார்த்தமானது.
ஆனால், அரசாங்கம் என்ற அடிப்படையில் இத்தகைய மனித புதைகுழிகளை அகழ்வாரய்ச்சி செய்து உண்மைகளைக் கண்டறியச் செய்வதற்கும், பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதற்கும் காணப்படுகின்ற அர்ப்பணிப்பு முக்கியமானது.
அத்தகைய அர்ப்பணிப்பு காணப்படுமாக இருந்தால், அரசாங்கம் இருதரப்பு, பல்தரப்பு ஒத்துழைப்புக்கள் ஊடாக சர்வதேச நாடுகளிட மிருந்து உதவிகளைப் பெற்றுக்கொள்ள முடியும். ஆனால் அரசாங்கம் அந்த விடயத்தில் ஆர்வம் காண்பிக்காதுள்ளது.
இதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. சர்வதேச நாடுகளிடத்தில் ஒத்துழைப்புக்களை கோருகின்றபோது, அந்நாடுகள் சர்வதேச தரங்களை உறுதி செய்து அகழ்வாராய்ச்சிகளை முன்னெடுப்பதற்கு அழுத்தங்களை அளிக்கலாம். உண்மைகளை கண்டறிந்து பொறுப்புக்கூறுவதற்கு வலியுறுத்தலாம். அவ்வாறு செய்கின்றபோது, உள்நாட்டில், படையினருக்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்க வேண்டிய நிலைமைகள் நிச்சயமாக உருவாகும். அவ்வாறு உருவாகின்றபோது படை யினரும், தென்னிலங்கை சிங்கள மக்களும் ஆட்சியாளர்களுக்கு எதிராக திரண்டெழுந்து விடுவார்களோ என்ற அச்சம் காணப்படுகின்றது.
இனமொன்று திட்டமிட்டு கொன்று குவிக்கப்பட்டு புதைக்கப்பட்டிருந்தாலும், அதுபற்றி உண்மைகளை கண்டறிந்து, பொறுப் புக்கூறு வதற்கு அரசாங்கம் தயாரில்லாத நிலையில் தனது வாக்குவங்கியை பாதுகாப்பதற்கு முயற்சிக்கும் மூன்றாந்தர நிலைமையே கடந்த கால அர சாங்கங்களின் காலத்திலும் காணப் பட்டது. அதேநிலைமையே தற்போதும் தொடருகிறது.
1998 ஆம் ஆண்டு கிருசாந்தி குமாரசாமி படுகொலை கொலை வழக்கில் குற்றம்சாட்டப் பட்டு, மரணதண் டனை விதிக்கப்பட்ட, லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்ஷ, இராணு வத்தினரால் கொன்று புதைக்கப்பட்ட சுமார் 300 பேர் புதைக்கப்பட்ட இடங்கள் தனக்குத் தெரியும் என்று கூறியிருந்தார்.
அவர் கூறியபடி அகழ்வுப் பணிகள் முறையாக முன்னெடுக்கப்பட்டிருந்தால்,  கூடுத லான தடயங்களுடன், எலும்புக்கூடுகளைக்  கண்டறிவதற்கான வாய்ப்புகள் இருந்தன.
ஆனால், அகழ்வுப்பணிகள் முன்னெடுக் கப்பட வில்லை. ஆட்சியில் இருந்த அரசாங்கங்கள் அதற்கான ஆர்வத்தைக் காண்பிக்காது, எவ்வாறு மூடி மறைக்கலாம் என்றே சிந்தித்தன. அக்காலத்தில் காணப்பட்ட போர்ச்சுழல் பொதுமக்கள் வீதியிலிறங்கிப் போராடுவதற்கு இடமளித்திருக்கவில்லை. தற்போதைய ‘அணையா விளக்கு’ போராட்டம் போன்ற கவனயீர்ப்பு பற்றி சிந்திப்பதற்கு கிஞ்சித்தும் இடமளித்திருக்கவில்லை.
ஆனால் தற்போதைய சூழல் மாறுபட்டது. செம்மணி சித்துப்பாத்தி பகுதியில், எங்கு தோண்டினாலும் சடலங்கள் அல்லது மனித எச்சங்கள் அல்லது மனித பாவனைப் பொருட்கள் தென்படுகின்ற அளவுக்கு ஒரு மோசமான நிலைமையே காணப்படுகின்றது.
குறித்த மனிதப் புதைகுழியில் இருந்து, தொடர்ச்சியாக மனித எலும்பு எச்சங்கள் மீட்கப் படுகின்ற நிலையில், இந்த புதைகுழி பற்றிய உண்மைகள் வெளிப்படுமா என்ற அச்சம் கூடவே மேலெழவும் ஆரம்பித்துள்ளது.
ஏனென்றால் அரசாங்கத்தின் பிற்போக்குத் தனமான நிலைமை முதற்காரணமாக உள்ளது. அடுத்ததாக, பாதிக்கப்பட்ட தமிழ்த் தரப்புக்குள் காணப்படுகின்ற போட்டிகளும், மாறுபட்ட நிலைமைகளும் வலுவான கோரிக்கைகளை நீர்த்துப்போகச் செய்யும் துர்ப்பாக்கிய நிலை மைகளை தோற்றுவிக்கின்றன.
ஆகவே பாதிக்கப்பட்ட தரப்பான தமிழ்த் தரப்பு செம்மணி மனித புதைகுழி விடயத்தில் தாமதமின்றி தீர்க்கமான முக்கிய சில விடயங்களை கையாள வேண்டியது அவசியமாகின்றது.
அதில் முதலாவது, 1999 இல் அகழப்பட்ட கிருசாந்தி குமாரசுவாமி உள்ளிட்ட 15 உடல் எச்சங்களும், தற்போது அகழப்பட்டுக் கொண்டிருக்கும் எலும்புக்கூடுக ளும் ஒரே குற்றவியல் சூழலுடன் தொடர்புபட்டவை என்ற அடிப்படையில் கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில் இருக்கும் முடிவுறா வழக்குடன் தற்போதைய விசாரணைகள் இணைக்கப்பட்டு ஒரே குற்றவியல் நடவடிக்கையின் பகுதிகளாகக் கருதப்பட வேண்டியதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.
இரண்டாவதாக, ஏலவே அகழப்பட்டு கிளஸ்கோவில் பாதுகாக்கப்படும் எலும்புக்கூடுகள் பற்றிய விசாரணை அறிக்கைளைப் பெறுவதோடு அவற்றை மீண்டும் இலங்கைக்கு கொண்டுவந்து தற்போது அகழ்வில் கண்டறியப்பட்ட எலும்புக் கூடுகளுடன் ஒன்றிணைத்து உயர் பாதுகாப்பில் வைக்கப்பட்டு ஆய்வுகள் தொடரப்பட வேண்டும்.
மூன்றாவதாக, அகழ்வுப்பணிகள் சர்வதேச தரப்பில் முன்னெடுக்கப்படுவதை உறுதி செய்வதோடு, சர்வதேச சுயாதீன நிபுணர் ஒருவர் அல்லது குழுவினரின் கண்காணிப்பின் கீழ் முன்னெடுப்பதற்கு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
\நான்கவதாக, ஐ.நா.மனித உரிமைகள் பேரவையின் கீழ் செயற்படுகின்ற சாட்சியங்களை திரட்டும் ‘இலங்கைப் பொறுப்பக்கூறல் செயற் றிட்டம்’ தொடர்ந்தும் செயற்படுவதில் நிதி நிலைமைகள் தாக்கம் செலுத்துகின்ற நிலையில் அதற்கான நிதியுதவிகளைப் பெறுவதற்கும், அச்செயற்றிட்டம் நீடிக்கப்படுவதையும் உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். இதில் புலம்பெயர் அமைப்புக்களுக்கு கணிசமான பங்குள்ளது.
ஐந்தாவதாக, அடுத்து மாரிகாலம் வரவுள்ளதால் அகழ்வுப்பணிகள் பாதிக்கப்படுவதோடு ஏலவே அகழப்பட்ட பகுதிகளும் பாதிப்படை யலாம். ஆகவே உள்நாட்டு, வெளிநாட்டு சுயாதீன தொண்டர்களை உள்வாங்கி அகழ்வுப்பணிகளை வினைத்திறனாக விரைவுபடுத்தவதற்கான நட
வடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். இதற்காக ஐ.நா.அமைப்புக்களை நாடுவது  பொருத்தமான தாக இருக்கும்.
இத்தகைய யதார்த்த நிலைமைகளை நோக்கி தமிழ் தரப்புக்கள் பல்வேறு தளங்களில் ஒன்றிணைந்து பொதுவேலைத்திட்டத்துடன் பய
ணிப்பதன் ஊடாகவே செம்மணியில் நிகழ்ந் தேறியுள்ள இன அழிப்புக்கான ஆதாரங்கள் பாது காப்பாக உறுதிப்படுத்தப்படும். பொறுப்புக் கூற லுக்கான வலுவான அடையாளங்களாக அமையும்.