ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் மீது நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு

ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் உர்சுலா வொன் டேர் லெவென் மீது நம்பிக்கையில்லா வாக்கெடுப்பை கொண்டு வரு வதற்கு தேவையான நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை தம்மால் பெறமுடியும் என ஐரோ ப்பிய ஒன்றியத்தின் நாடா ளுமன்றக் குழு ஒன்று தெரிவித்ததாக பிரித் தானியாவைத் தளமாகக் கொண்ட த பைனான்ஸியல் ரைம்ஸ் கடந்த வியாழக்கிழமை(26) தெரிவித்துள் ளது.
கோவிட் தடுப்பு மருந்து விவகாரத்தின் பைசர் என்ற நிறுவனத்துடன் பல பில்லியன் டொலர்கள் பெறு மதியான நிதி பரிமாற்றத்தில் அவர்   ஈடுபட்டது தொடர்பான விசாரணைகளு க்கு அவர் ஒத்துழைக்க மறுப்பதே இந்த நம் பிக்கையில்லா பிரேரணைக்கான கார ணம்.
கடந்த மாதம் ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவருக்கும் பைசர் மருந்து உற்பத்தி நிறுவனத்தின் தலைவருக்கும் இடையிலான தொடர்பாடல்களை பெறுவது தொடர்பான அமெரிக்க ஊடகத்தின் முயற்சிக்கு ஐரோப்பிய நீதிமன்றம் சாதகமான பதிலை வழங்கவில்லை.
தமது குழுவினர் 72 நாடாளுமன்ற உறுப்பினர்க ளின் கையொப்பங்களை பெற்ற பின்னர் நம்பிக்கையில்லா தீர்மானத்தை சமர்ப்பிக்க முடிவு செய்துள்ளதாக றோமானியாவின் நாடா ளுமன்ற உறுப்பினர் கேயொர்ஜி பிப்பேரா தெரிவித்துள்ளார். உர்சுலா தொடர்பாடல்கள் தொடர்பான தகவல்களை கொடுப்பதற்கு மறுத்துவருவதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார். வெளிப்படைத் தன்மையை பேணத்தவறி வரும் ஐரோப்பிய ஒன்றிய தலைவர் பதவி விலக வேண்டும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கைவிடுத்து வருகின்றனர்.