வன்னியில் மாவீரர்களின் பெற்றோர் கௌரவிப்பு நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன.
இதற்கமைவாக நேற்று (24) பூநகரி குமுழமுனைச் சந்தியிலும், இன்று(25) கிளிநொச்சி கூட்டுறவுச் சங்கக் கட்டிடத்திலும் இடம்பெற்றன.
வீரத் தமிழர் முன்னணி ஐக்கிய இராச்சியம் தாயகத்தில் அறம் செய் அறக்கட்டளை ஊடாக மேற்கொள்ளப்பட்ட இந்நிகழ்வில் ஏராளமான மாவீரர்களின் பெற்றோர்கள், குடும்பங்கள், உரித்துடையோர் கௌரவிக்கப்பட்டனர்.