இஸ்ரேலுக்கு உதவும் அமெரிக்கா – கொந்தளிக்கும் ஈரான்!

ஈரான் மீதான இஸ்ரேலின் தாக்குதலால் நடான்ஸில் உள்ள யுரேனியம் செறிவூட்டல் மையத்தின் ஒரு பகுதி அழிக்கப்பட்டதாக சர்வதேச அணுசக்தி நிறுவனத்திடம் ஈரான் தெரிவித்துள்ளது.

இஸ்ரேலின் ஆபரேஷன் ரைசிங் லயன் தாக்குதல்களுக்கு பதிலடியாக ஈரான் இஸ்ரேலை பல நீண்ட தூர ஏவுகணைகளால் தாக்கத் தொடங்கியுள்ளது. இஸ்ரேலை நோக்கி ஈரான் ஏவிய இந்த ஏவுகணைகளை சுட்டு வீழ்த்த அமெரிக்க இராணுவம் உதவியதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

”இஸ்ரேலில் பொதுமக்கள் வாழும் பகுதிகளை குறிவைத்து ஏவுகணைத் தாக்குதலை நடத்தி ஈரான் எல்லை மீறிவிட்டது. இந்த கொடூரமான நடவடிக்கைகளுக்கு ஈரான் பெரும் விலை கொடுக்கப்போகிறது.” என இஸ்ரேல் எச்சரித்துள்ளது.

ஈரான் மீது இஸ்ரேல் தொடர் தாக்குதல் நடத்தி வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள மெஹ்ராபாத் விமான நிலையத்தின் அருகே மிகப்பெரிய வெடிப்புச்சத்தம் கேட்டதாக அங்குள்ள ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.