மாகாணசபை தேர்தல்கள் திருத்தச் சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பு

இலங்கை தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கத்தால் தனிநபர் பிரேரணையாக மாகாண சபைகள் தேர்தல்கள் திருத்தச் சட்டமூலம் இன்று (05) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

இதனை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் நிஷாம் காரியப்பர் வழிமொழிந்தார்.
பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட மாகாண சபைகள் தேர்தல் திருத்தச் சட்டமூலம் தொடர்பான வர்த்தமானி கடந்த மே 22 ஆம் திகதி வெளியிடப்பட்டது.

அந்த வர்த்தமானி அறிவித்தலில் 2017ஆம் ஆண்டில் செப்டம்பர் 21 ஆம் திகதி வலுவிலிருந்த 1988 ஆம் ஆண்டின் 2 ஆம் இலக்க மாகாண சபைத் தேர்தல்கள் சட்டத்தின் ஏற்பாடுகள் திருத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சட்ட மூலம் பாராளுமன்றில் நிறைவேற்றப்படுமாயின் மாகாண சபை தேர்தலை நடத்த முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.