‘பயங்கரவாத தடைச் சட்டம் நீக்கப்பட வேண்டும்’ என்று பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பாராளுமன்றத்தில் இன்று வலியுறுத்தினார்.
‘இனப்பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில் தெளிவான நிலைப்பாட்டை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் முன்வைக்கவில்லை’ என்றும் அவர் குற்றஞ்சாட்டினார். ’75 வருடமாக நிலவும் பிரச்சினையை தீர்க்கவே மக்கள் இந்த அரசாங்கத்துக்கு வாக்களித்தனர்’.
‘அதேபோன்று பயங்கரவாத தடைச் சட்டத்தினால் தமிழ் மக்களே அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்’ என்று பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். பயங்கரவாத தடைச் சட்டம் நீக்கப்படும் என்று கூறிய தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், ஆட்சிக்கு வந்து ஒரு வாரத்துக்குள்ளேயே அந்த நிலைப்பாட்டில் இருந்த விலகியுள்ளது என்றும் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு பதிலளித்த நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார, ‘பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது’ என்று தெரிவித்தார். ‘பயங்கரவாத தடைச் சட்டத்துக்கு பதிலாக புதிய சட்டம் ஒன்று அறிமுகப்படுத்தப்படும்’ ‘அதற்கான அமைச்சரவை பத்திரத்தை தயாரிக்கும் பணி இடம்பெறுகிறது’ என்றும் நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார குறிப்பிட்டுள்ளார்.