தபால்மூல வாக்கெடுப்பு: முதலாவது உத்தியோகபூர்வ முடிவுகள் வெளியாகின

இன்று நடைபெற்ற பாராளுமன்றத்திற்கான தேர்தலின் முதலாவது உத்தியோகபூர்வ முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

அதன்படி, காலி மாவட்டத்திற்கான தபால்மூல வாக்கெடுப்பில் தேசிய மக்கள் சக்தி கட்சி வெற்றி பெற்றுள்ளது.

போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,

தேசிய மக்கள் சக்தி (NPP) – 32,296 வாக்குகள்
ஐக்கிய மக்கள் சக்தி (SJB) – 3,523 வாக்குகள்
புதிய ஜனநாயக முன்னணி (NDF) – 1,964 – வாக்குகள்
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) – 1,846 வாக்குகள்
சர்வஜன அதிகாரம் (SB) – 607 வாக்குகள்

இரத்தினபுரி மாவட்டத்துக்கான தபால் மூல வாக்கெடுப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன.

அதன்படி, இரத்தினபுரி மாவட்டத்திற்கான தபால் மூல வாக்கெடுப்பில் தேசிய மக்கள் சக்தி வெற்றி பெற்றுள்ளது.

அதற்கமைய;

தேசிய மக்கள் சக்தி – 27,776 வாக்குகள்
ஐக்கிய மக்கள் சக்தி – 2,969 வாக்குகள்
புதிய ஜனநாயக முன்னணி – 1,528 வாக்குகள்
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 1,031 வாக்குகள்

களுத்துறை மாவட்டத்துக்கான தபால் மூல முடிவுகள் வெளியாகியுள்ளன.

அதன்படி;

தேசிய மக்கள் சக்தி – 29,076 வாக்குகள்
ஐக்கிய மக்கள் சக்தி – 3,340 வாக்குகள்
புதிய ஜனநாயக முன்னணி – 1,913 வாக்குகள்
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 1,160 வாக்குகள் பெற்றுள்ளன.