ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் இஸ்ரேலுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் இஸ்ரேல் கட்ஸ் கூறியுள்ளார்.
இஸ்ரேல் மீது ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலை குட்டெரெஸ் “வெளிப்படையாக கண்டிக்க” தவறியதால் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக வெளியுறவுத் துறை அமைச்சர் கூறியுள்ளார்.
மத்திய கிழக்கில் மோதல் அதிகரித்து வருவதை நேற்று (அக்டோபர் 1) கண்டித்த ஐ.நா பொதுச்செயலாளர் போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்தது குறிப்பிடத்தக்கது.