புதிய அமைச்சரவை முதன்முறையாக இன்று கூடுகிறது: ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவிப்பு

புதிய அமைச்சரவை முதன் முறையாக இன்று(30) ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையில் கூடுகிறது.

இதன் போது முக்கிய பல தீர்மானங்கள் எடுக்கப்பட இருப்பதோடு அது தொடர்பில் அமைச்சரவை கூட்டத்தின் நிறைவில் ஊடகங்களுக்கு அறிவிக்கப்படும்.