தமிழ்ப் பொது வேட்பாளர் ஈழத்தமிழரின் ஒற்றுமையின் அடையாளம்

இலங்கையில் நடைபெறவுள்ள சனாதிபதித் தேர்த லில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாண தமிழ் கட்சிகள் மற்றும் அமைப்புகள் இணைந்து, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரனை தமிழ் மக்களுக்கான பொது வேட்பாளராக நிறுத்தியுள்ளன.

இலங்கையில் சனாதிபதி தேர்தலில் தமிழ் மக்களுக்கான பொது வேட்பாளராக ஒருவர் கள மிறக்கப்படுவது இதுவே முதல் முறை என்பது குறிப் பிடத்தக்கது.

மேலும் தேர்தல் நெருங்கும் நிலையில் வடக்கு கிழக்கு முழுவதுமாக தமிழ் பொது வேட்பாளருக்கு ஆதரவு பெருகி வருகின்றன.

இந்த நிலையில், தமிழ் பொது வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்து, நீதிக்கும் சமாதானத்துக்குமான குருக்கள்- துறவியர் ஒன்றியம் வடக்கு கிழக்கு- வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில்,

‘மீண்டும் ஒரு சனாதிபதி தேர்தலுக்கு நாடு தயாராகிக்கொண்டு இருக்கின்றது. இச் சனாதிபதி தேர்தல் பற்றிய அல்லது சனாதிபதி தேர்தல் வேட்பாளர் பற்றிய அரசியல் அறிவு, அவர்களது தனி-கூட்டு அரசியல் இறந்தகால வரலாற்றுடன்தான் எமக்கு முன்னுள்ள தெரிவாக முன்வைக்கப் பட்டுள்ளது. இது எவ்வளவு நம்பிக்கை தருவதாக இருக்கிறது என்பதை அடிக்கோடிட்டு காட்ட வேண்டிய தேவை யில்லை. இந்த சனாதிபதி தேர்தலும் ஒற்றையாட்சி அரசியல் அமைப்புக்குள் உள்ள சட்டகத்திற்குள் இருந்தே நடாத்தப்படுகின்றது என்ற உண்மையை கூறாமல் இருக்க முடியாது.

தற்போதுள்ள சனநாயக முறைமை எண்களைக் கொண்டே தீர்மானிக்கப்படுகின்றது என்ற உண்மை பொது அறிவுக்குட்பட்டது. வாக்குகளின் எண்ணிக்கையை மையப்படுத்திய சனாதிபதி சனநாயக தெரிவில் ஈழத்தமிழ் மக்களுடையதும் ஏனைய சிறுபான்மை இனக் குழுக்களினதும் வாக்குகள் செல்வாக்கு செலுத்துவது வரையறுக்கப் பட்டுள்ளது.

தெற்கிலிருந்து சனாதிபதி தேர்தலில் போட்டி யிடும் வேட்பாளர்கள் சிங்கள பௌத்த தேசியத்தின் மேலாண்மையை வலியுறுத்தியே பிரசார மேடைகளை அலங்கரிக்கின்றார்கள். ஈழத்தமிழ் மக்களுடைய கூட்டு அரசியல் வேணாவாவையும் தமிழின அழிப்பையும் ஏற்றுக்கொள்ள மறுக்கின்ற அரசியல் கோட்பாட்டுச் சூழலில் தெற்கில் இருக்கும் சனாதிபதி வேட்பாளர்கள் ஒன்றுபட்டிருக்கின்றார்கள்.

அதே நேரத்தில் தமிழின அழிப்பில் நீதி கோருவதை மறுப்பதோடல்லாமல் ஸ்ரீலங்காவின் படைக் கட்டுமானம் சிங்கள தேச விடுதலைக் கட்டுமானத்தில் ஆற்றிய பங்களிப்பை கதாநாயக சொல் லாடலுக் கூடாகவே கட்டமைக்கின்றார்கள்.

தமிழர்  தாயகம்  தொடர்ந்து  ஈழ  தமிழ்த்தேசிய   நீக்கத்துக்குள்  வலிந்து தள்ளப்பட்டுக்கொண்டு இருக்கின்றது. இது வெவ்வேறு வடிவங்களை பரி மாணங்களை கொண்டுள்ளது.

உதாரணமாக, ஈழத்தமிழர் ஒருங்கிணைந்த தாய கத்தை துண்டாடல், தமிழர் தாயகத்தில்  இராணுவ மயமாக்கச் செறிவை அதிகரித்தல், ஈழத்தமிழர் தாயகம் தொடர்ந்தும் அடக்குமுறைக்கு உட்பட்ட தேசமாகவே உள்ளது. ஈழத்தமிழர் நிலங்கள் வலிந்து பறிக்கப்படுகின்றன.

சிங்கள –   பௌத்த மயமாக்கல் தொடர்ந்து கொண்டே இருக்கின்றது. ஒட்டுமொத்தத்தில் ஈழத் தமிழர் இருப்பு கேள்விக்கு உட்படுத்தப் பட்டிருக்கின்றது.

இவ்வாறான அரசியல் சூழமைவில் அரசியல் அறத் தெரிவாக தமிழ்ப் பொது வேட்பாளர் ஈழத்தமிழ் மக்களின் ஒற்றுமை யின் அடையாளமாக நமக்குமுன் நிறுத்தப்பட்டுள் ளார். இம் முக்கியமான காலகட்டத்தில் தமிழ் மக்களின் தெரிவு, ஈழத்தமிழரின் அரசியல் வேண வாவை வலுப்படுத்தும் என்பது எமது ஆழமான நம்பிக்கை’ என்றுள்ளது.