ஜனாதிபதி தேர்தல்- 2ம் இடத்தில் சஜித் பிரேமதாச : ஆய்வில் தகவல்

செப்ரெம்பர் 21ஆம் திகதி இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்காக அனைத்து ஜனாதிபதி வேட்பாளர்களும் தங்களுடைய பிரச்சார நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள நிலையில், இலங்கை சுயாதீன ஆராய்ச்சி மேம்பாட்டு பிரிவு வேட்பாளர்கள் தொடர்பான தொடர் ஆய்வு நடவடிக்கையில் ஈடுபட்டுவருகின்றனர்.

அந்தவகையில், கண்டி, நுவரெலியா, மாத்தளை , அம்பாறை, திருகோணமலை, மட்டக்களப்பு, அநுராதபுரம், புத்தளம், குருநாகல், மாத்தறை, காலி, ஹம்பாந்தோட்டை, களுத்துறை, கொழும்பு, கம்பஹா, மொனராகல, பதுளை, பொலன்னறுவை உள்ளிட்ட மாவட்டங்களில் இந்த ஆய்வை மேற்கொண்டுள்ளது.

இதனடிப்படையில், அனைத்து மாவட்டத்திலும் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முதலிடத்தில் இருப்பது  தெரிய வந்துள்ளது.

குறிப்பாக மத்திய மாகாணத்தில் 1421 வாக்குகளைப் பெற்று ரணில் முதலிடத்தில் உள்ளார். தொடர்ந்து இரண்டாவது இடத்தில் சஜித் பிரேமதாச 1005 வாக்குகளும் மூன்றாவது இடத்தில் அநுரகுமார திசாநாயக்க 420 வாக்குகளும் வெறும் 70 வாக்குகளுடன் நாமல் ராஜபக்ச நான்காவது இடத்திலும் உள்ளனர்.

ஊவா மாணத்திலும் ரணில் 720 வாக்குகளை பெற்று முதலிடத்திலும், சஜித் 464 வாக்குகளை பெற்று இரண்டாவது இடத்திலும் 180 வாக்குகளை பெற்று அநுரகுமார மூன்றாவது இடத்திலும் 95 வாக்குகளை பெற்று நாமல் ராஜபக்ச நான்காவது இடத்திலும் உள்ளார்.