டெல்லி முதல்வர் கேஜ்ரிவால் கைது – பதற்றத்தையடுத்து படையினா், பொலிஸாா் குவிப்பு

kk a டெல்லி முதல்வர் கேஜ்ரிவால் கைது - பதற்றத்தையடுத்து படையினா், பொலிஸாா் குவிப்பு
மதுபான கொள்கை ஊழல் வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலை இன்று இரவு அமலாக்கத் துறை கைது செய்தது. இதனால், டெல்லியில் பரபரப்பான சூழல் நிலவுகிறது.
kk1 டெல்லி முதல்வர் கேஜ்ரிவால் கைது - பதற்றத்தையடுத்து படையினா், பொலிஸாா் குவிப்பு

டெல்லியில் உள்ள அரவிந்த் கேஜ்ரிவால் இல்லத்தில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சுமார் மூன்று மணி நேரம் விசாரணையில் ஈடுபட்டனர். அதன்பின், அதிரடியாக கைது செய்யப்பட்ட அவர் வெள்ளிக்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளார்.

இந்த நிலையில் ஆம் ஆத்மி நிர்வாகிகளும் தொண்டர்களும் ஆர்ப்பாட்டத்தை நடத்தி வருவதால், பொலிஸாரும் பாதுகாப்புப் படையினரும் குவிக்கப்பட்டுள்ளனர்.