உலகத்தமிழர் பேரவை ரணிலிடம் இதனை கேட்டார்களா?

அடுத்த வருடம் அரச தலைவர் தேர்தல் அதன் பின்னர் நாடாளுமன்ற தேர்தல் அதன் பின்னர் மாகாணசாபை தேர்தல் அதன் பிற்பாடு அரசியலமைப்பு திருத்தம் என்ற கதையை இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்கா தன்னை இந்த வாரம் சந்தித்த உலகத்தமிழர் பேரவையிடம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது.

ஆனால் அது இருக்கட்டும், முதலில் அரசியல் யாப்பில் உள்ள 13 ஆவது திருத்தச்சட்டத்தை நிறைவேற்றி மாகாணசபை தேர்தலை நடத்துங்கள் அப்புறம் அரசியல் யாப்பை திருத்தலாம் என ரணிலை சந்தித்த உலகத்தமிழர் பேரவையில் யாராவது கூறினார்களா என தெரியவில்லை என நடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.