செயல்பாட்டில் உள்ள ஈரானின் 90% ஏவுகணைத் தளங்கள்

ஈரான் தனது பெரும்பாலான ஏவுகணைத் தளங்களை தக்கவைத்துக்கொண்டு, சேதமடைந்த உள்கட்டமைப்பை மீட்டெடுத்துள்ளது எனஅமெரிக்க உளவு மற்றும் பாதுகாப்பு அமைப்புகளின் தரவுகளை மேற்கோள் காட்டி நியூயார்க் டைம்ஸ் நாளேடு கடந்த புதன்கிழமை(13) தெரிவித்துள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் கூற்றுகளுக்கு மாறாக, ஈரான் தனது பெரும்பாலான ஏவுகணைத் தளங்களுக்கான பாதுகாப்பை இன்னும் கொண்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
அந்தப் பத்திரிகையின்படி, சுமார் 90% தளங்கள் செயல்பாட்டில் உள்ளன, மேலும் சேதமடைந்த தளங்கள் மீட்டெடுக்கப்பட்டுள்ளன. ஹோர்முஸ் ஜலசந்தியில் உள்ள 33 ஏவுகணைத் தளங்களில் 30-க்கான செயல்பாட்டு செயற்பாட்டை ஈரான் மீட்டெடுத்துள்ளது.
இது, இந்த மூலோபாயப் பாதை வழியாகச் செல்லும் அமெரிக்க இராணுவக் கப்பல்கள் மற்றும் எண்ணெய் டேங்கர்களை அச்சுறுத்துவதற்கு அதற்கு வாய்ப்பளிக்கிறது. மதிப்பீடுகளின்படி, போருக்கு முந்தைய. நிலைகளுடன் ஒப்பிடுகையில், தெஹ்ரான் தனது நகரும் ஏவுகணை ஏவுதளங்களில் சுமார் 70%ஐயும், ஏவுகணை இருப்புகளில் ஏறத்தாழ 70%-ஐயும் தக்க வைத்துள்ளது.
ஈரானிய இராணுவம் “அழிக்கப்பட்டுவிட்டது” என்றும் “இனி அச்சுறுத்தலாக இல்லை” என்றும் டொனால்ட் ட்றம்ப் மற்றும் பென்டகன் தலைவர் பீட் ஹெக்செத் ஆகியோர் முன்னதாக வெளியிட்ட பொது அறிக்கைகளை இந்தத் தரவுகள் பொய்யாக்கு கின்றன.
அதேசமயம், ஈரான் குறிப்பிடத்தக்க ஏவுகணைத் திறன்களைக் கொண்டுள்ளது என்பதை அமெரிக்க. உளவுத்துறைத் தரவுகள் காட்டுகின்றன. பாரசீக வளை குடாவின் கடற்கரையில் உள்ள 30-க்கும் மேற்பட்ட. ஏவுகணைத் தளங்களில், வெறும் 3 தளங்கள் மட்டுமே அழிக்கப்பட்டன. ஈரானுக்கு எதிரான. தாக்குதல்களுக்காக அமெரிக்கா 30 பில்லியன் டாலருக்கும் அதிகமாகச் செலவிட்ட போதிலும், மீதமுள்ளவை தொடர்ந்து செயல் படுகின்றன என குயின்சி நிறுவனத்தின் துணைத் தலை வர் டிரிட்டா பார்சி தெரிவித்துள்ளார்.