2035ஆம் ஆண்டளவில் தமிழர் பற்றி பேசமுடியாத நிலைமை வந்துவிடும் சிவாஜிலிங்கம்

2035ஆம் ஆண்டளவில் தமிழர் பற்றி பேசமுடியாத நிலைமைகூட வந்துவிடுவதற்கு வாய்ப்பு உள்ளதென தமிழ்த் தேசியக் கட்சியின் செயலாளர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தன்னிச்சையான போக்குதான் மாற்று அணிகள் உருவாகுவதற்குக் காரணம். இதேவேளை புதிய கூட்டணிக்குத் தலைமைத்துவ சபை ஒன்றை உருவாக்குவது தொடர்பாக உத்தேசிக்கப்பட்டு வருகின்றது.

அதாவது விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணி, சுரேஷ் பிரேமச்சந்திரன் தலைமையிலான ஈ.பி.ஆர.எல்.எப், தமிழ்த் தேசியக் கட்சி, அனந்தி தலைமையிலான ஈழத் தமிழர் சுயாட்சி கழகம் என்பனவே தற்போது புதிய கூட்டணி பற்றிப் பேசி வருகின்றன.

எனினும் குறித்த கட்சிகளில் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணிக்கு மாத்திரமே அங்கீகரிக்கப்பட்ட கட்சி என்ற அந்தஸ்து உள்ளது. அந்தக் கட்சியின் பெயரை மாற்றுவது தொடர்பாக அதன் மத்திய குழுவில் ஆராய்வது அனுமதிகளை பெற்றுக் கொண்ட பின்னர் தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் அனுமதி கோருவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தன்னிச்சையான போக்கே புதிய கூடடணி உருவாக்குவதற்குக் காரணமாகும். மேலும் 2035ஆம் ஆண்டளவில் தமிழர் பற்றி பேச முடியாத நிலைமைகூட வந்துவிடுவதற்கு வாய்ப்புள்ளது“ என தெரிவித்துள்ளார்.