’20’ க்கு எதிரான மனுக்களின் தொகை 39 ஆக உயர்வு; நேற்று மட்டும் 21 மனுக்கள் தாக்கல்

அரசமைப்பின் 20 ஆவது திருத்த வரைபை சவாலுக்குட்படுத்தி நேற்றும் 21 மனுக்கள் உயர் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டன. இதனால், 20ஆம் திருத்தமானது பாராளுமன்றல் சமர்ப்பிக்கப்பட்ட காலம் தொட்டு, நேற்று மாலை வரை தாக்கல் செய்யப்பட்ட மனுக்களின் எண்ணிக்கை 39 ஆக உயர்ந்துள்ளது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி, ஐக்கிய தேசியக் கட்சியின் செயலாளர் அகில விராஜ் காரியவசம், அந்தக் கட்சியின் துணைத் தலைவர் ருவான் விஜயவர்த்தன, தேர்தல் ஆணைக் குழு உறுப்பினர் ரட்ண ஜீவன் ஹுல், ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் மயந்த திஸாநாயக்க உள்ளிட்டோர் நேற்று மனுக்களை தாக்கல் செய்திருந்தனர்.

இதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, மாற்றுக்கொள்கைகளுக்கான மத்திய நிலையம் என்பன முன்னதாக உயர்நீதிமன்றத்தில் மனுக்களை தாக்கல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.