காசா பகுதியை பஞ்சம் வாட்டி வதைக்கும் வேளையில், இஸ்ரேலுக்கு அமெரிக்கா தொடர்ந்து இராணுவ உதவி செய்வதாகவும், அமெ ரிக்க மக்களின் வரிப்பணம் குழந்தைகளை கொல்லவும், பட்டினியால் வாட்டவும் பயன் படுத்தப்படுகிறது எனவும் அமெரிக்க செனட்டர் பெர்னி சாண் டர்ஸ் தெரிவித்துள்ளார்.
காசாவில் 18,500 குழந்தைகள் இஸ்ரேலிய இராணுவத்தால் கொல்லப்பட்டுள்ளனர். இந்த போர்க் குற்றங்கள் நடைபெற்று வருகின்ற போதும், அமெரிக்கா போருக்கு 22 பில்லியன் அமெரிக்க டாலருக்கும் அதிகமாக நிதி வழங்கியுள்ளது. “எங்கள் வரி செலுத்துவோர் டாலர்கள் குழந்தைகளை பட்டினியால் கொல்லவும்,பள்ளிகளில் குண்டு வீசவும், உதவிக்காக காத்திருக்கும் பசியால் வாடும்மக்களை துப் பாக்கியால் சுடவும் பயன் படுத்தப்படு கின்றன” என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, வெளிநாட்டு பத்திரிகையா ளர்கள் காசா பகுதிக்குள் நுழைய அனுமதிக்கப்பட வேண்டும் என்றும், இஸ்ரேலின் முற்றுகையால் ஏற்படும் பட்டினியை முடிவுக்குக் கொண்டுவர நடவடிக்கை தேவை என்றும் பத்திரிகையாளர் களைப் பாதுகாக்கும் குழு (CPJ) தெரிவித்துள்ளது. “உலகம் இப்போது செயல்பட வேண்டும்” என்று பி.ஜே.கே. குழுவின் பிராந்திய இயக்குநர் சாரா குதா கடந்த வியாழக்கிழமை (7) தெரி வித்துள்ளார்.