369 Views
அரசமைப்பின் 20 ஆவது திருத்தத்தின் மூலம் துணைப் பிரதமர் பதவியை ஏற்படுத்துவது தொடர்பாக அரசுக்குள் எந்தவிதமான பேச்சுக்களும் இடம்பெறவில்லை என நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
மல்வத்து மற்றும் அஸ்கிரிய தேரர்களைச் சந்தித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர், “அரசமைப்பின் 13 ஆவது திருத்தத்தை திருத்துவது குறித்து அமைச்சர்கள் கவனம் செலுத்தவில்லை. புதிய அரசமைப்பிற்கான பேச்சுக்களின்போது மாற்றங்களை பரிசீலிக்க அரசு தயாராக உள்ளது” என்றார்.