12 வயதுக்குக் குறைவான குழந்தைகளிடம் தடுப்பூசி சோதனை: ஃபைசர் திட்டம்

12 வயதுக்குக் குறைவான குழந்தைகளிடம் தடுப்பூசியைப் பரிசோதனை செய்ய ஃபைசர் நிறுவனம் திட்டமிட்டிருக்கிறது.

இதற்காக 4,500 குழந்தைகள் தேர்வு செய்யப்பட இருக்கிறார்கள். அமெரிக்கா, பின்லாந்து, போலந்து, ஸ்பெயின் ஆகிய நாடுகளில் சோதனை நடக்கும் என ஃபைசர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

5 முதல் 11 வயதுடைய குழந்தைகளுக்கு 10 மைக்ரோகிராம் அளவிலும் 6 மாதம் முதல் 5 வயதுடைய குழந்தைகளுக்கு 3 மைக்ரோகிராம் அளவிலும் தடுப்பு மருந்து பயன்படுத்தப்பட இருக்கிறது.

முதற்கட்டமாக 144 குழந்தைகளிடம் குறைந்த அளவு மருந்தைக் கொண்டு சோதனை நடத்தப்பட்டது. அதில் கண்டறியப்பட்ட முடிவுகளின் அடிப்படையில் புதிய பரிசோதனைகள் தொடங்க இருக்கின்றன.

நன்றி – பிபிசி