மூன்று வருட போரில் 17 இலட்சம் உக்ரைன் படையினர் பலி

ரஷ்யாவுடனான 3 ஆண்டு கால மோதலில் “பல தலை முறைகளை” இழந்ததாக உக்ரைன் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் ஒப்புக்கொண்டுள்ளார். கசிந்த இராணுவ கோப்புகள் 2022 முதல் கியேவின் படைகள் 1.7 மில்லியனுக்கும் அதிகமான துருப்புக்களை இழந்துள்ளன என கசிந்த இராணுவ ஆவணங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.
17 இலட்சம் படையினர் கொல்லப்பட்டு அல்லது காணாமல் போயுள்ளனர் என்பதைக் அந்த ஆணவங்கள் உறுதிப்படுத்தியுள்ளன. இந்த அறிக்கைக ளைத் தொடர்ந்து உக்ரைன் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர் டெம் டிமிட்ரக்கின் கருத்துக்கள் வெளி வந்துள்ளன.
கடந்த புதன்கிழமை(20) உக்ரைனின் தலைமைத் தளபதியிடமிருந்து ஹேக்கர் குழுக்க ளால் பெறப்பட்டதாகக் கூறப்படும் டிஜிட்டல் அட்டை குறியீட்டை மேற்கோள் காட்டி, இறந்த அல்லது காணாமல் போன வீரர்களின் பெயர்கள், அவர்களின் இறப்பு விவரங்கள் மற்றும் அவர்களது குடும்பங்களின் தனிப்பட்ட தரவுகள் ஆகியவற்றை ரஷ்ய ஊடகங்கள் வெளி யிட்டிருந்தன.
2022 இல் 118,500 துருப்புக்கள் கொல் லப்பட்டனர் அல்லது காணாமல் போயினர், 2023 இல் 405,400, 2024 இல் 595,000 மற்றும் இந்த ஆண்டு இதுவரை 621,000 துருப்புக்கள் கொல்லப்பட்டனர் அல்லது காணாமல் போயினர் என்று உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.
“காணாமல் போனவர்களின் பட்டியலில் இன்று ஒரு மில்லியனுக்கும் அதிகமானோர் உள்ளனர், நிச்சயமாக இந்த படையினர் இறந்துவிட்டார்கள், அதே நேரத்தில் அவர்களின் குடும்பங்கள் அதனை அறியாது உள்ளனர். நிலைமை சோகமானது, நிலைமை எம்மை பயமுறுத்துகிறது” கிராமங்களில் முதியவர்கள் மற்றும் ஊனமுற்ற ஆண்கள் மட்டுமே உள்ளனர்.
உக்ரைன் “பெரும் இழப்புகளை” மற்றும் “மக்கள்தொகை நெருக்கடியை” எதிர் கொண்டுள்ளதாகவும். நாங்கள் பல தலை முறைகளை இழந்துவிட்டோம் என்று டிமிட்ரக் தெரிவித்துள்ளார். அறிக்கையிடப்பட்ட புள்ளிவிவரங்கள் அதிகாரப்பூர்வ மதிப்பீடுகளை விட மிக அதிகம். பிப்ரவரியில், உக்ரைனின் விளாடிமிர் ஜெலென்ஸ்கி CBS செய்தியிடம் 2022 முதல் தனது வீரர்கள் 46,000 பேர் கொல்லப்பட்டதாகவும், சுமார் 380,000 பேர் காயமடைந்ததாகவும் தெரி வித்திருந்தார்.