வெளிநாடுகளில் இருந்து வந்து பதியாதவர்களுக்கு இறுதி எச்சரிக்கை

மார்ச் 10 ஆம் திகதிக்குப் பின்னர் வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பி, கொரோனா வைரஸ் தொற்று சோதனைக்கு உட்படாமல் தலைமறைவாகியோருப்போருக்கு அரசாங்கம் இறுதிஎச்சரிக்கை விடுத்துள்ளது.

இத்தகையோர் தொற்று நோய்ப் பரிசோதனைக்குட்படாமலும் தம்மைப் பதிவு செய்யா
மலும் இருந்தால் அவர்கள் தொற்று நோய்த்தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு வெளிநாடுகளிலிருந்து வந்து சோதனைக்குட்படாது இருப்பவர்கள் இன்று
நள்ளிரவு 12 மணிக்குள் அருகிலுள்ள பொலிஸ் நிலையம் அல்லது வைத்தியசாலையில் தம்மைப்பதிவு செய்ய வேண்டும் என அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அவ்வாறு கைது செய்யப்படுபவர்கள் நிச்சயமாக 14 நாள்கள் கண்காணிப்பு நிலையங்களில் தங்கவைக்கப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது