வெலிகந்தை வைத்தியசாலையில் கொரோனா சிகிச்சைப் பிரிவு

கொரோனா விசேட சிகிச்சை பிரிவொன்று வெலிகந்தை வைத்தியசாலையில் நிறுவப்பட்டது.

இதன் நடவடிக்கைகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாக இராணுவ ஊடகப்பேச்சாளர், பிரிகேடியர் சந்தன விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளர்களுக்கு, சிகிச்சை வழங்குவதற்கு தேவையான அனைத்து வசதிகளும் குறித்த பிரிவில் நிறுவப்ப்படுவதாக இராணுவ ஊடகப்பேச்சாளர் கூறியுள்ளார்.

அங்கொடை தொற்றுநோயியல் பிரிவில், இட வசதிகளுக்கு பற்றாக்குறை ஏற்படுமாயின், தொற்றுக்குள்ளானோருக்கு சிகிச்சை வழங்குவதற்காக வெலிகந்த ஆதார வைத்தியசாலையில் விசேட பிரிவு நிறுவப்படுகின்றது.