வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி சிறீலங்காவை சீனா பாதுகாக்கும் -பாலித கோஹன 

ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் இலங்கை தொடர்பாக எந்தவிதமான பாதகமான யோசனைக்கு சென்றாலும் அவற்றை வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி சீனா நிராகரித்து விடும் என சீனாவுக்கான சிறீலங்கா தூதுவர் பாலித கோஹன தெரிவித்துள்ளார்.

மேலும் சிறீலங்கா குறித்து இவ்வாறானதொரு அறிக்கையை விடுப்பதற்கு மனித உரிமை ஆணையாளர் மிச்செல் பச்லெட்டுக்கு எவ்விதமான அதிகாரமும் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.