வவுனியா வடக்கு பிரதேச செயலகத்தின் புதிய பிரதேச செயலாளராக இ. பிரதாபன் இன்று (4.3) பதவியேற்றுக்கொண்டார்.
வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தின் பழையமாணவரான பிரதாபன் முல்லைத்தீவில் உதவி பிரதேச செயலாளராகவும் புதுக்குடியிருப்பில் பிரதேச செயலாளராகவும் கடமையாற்றிய நிலையில் தற்போது வவுனியா வடக்கிற்கு பிரதேச செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த 15 வருடங்களுக்கும் மேலாக வவுனியா வடக்கு பிரதேச செயலாளராக கடமையாற்றிய க. பரந்தாமன் கடந்த இரு மாங்களுக்கு முன் கொழும்பிற்கு இடமாற்றப்பட்டதையடுத்து காணப்பட்ட வெற்றியடத்திற்கே இ. பிரதாபன் நியமிக்கப்பட்ட நிலையில் இன்று காலை பிரதேச செயலகத்தின் உத்தியோகத்தர்கள் அவரை மாலை அணிவித்து வரவேற்றிருந்தனர்.
இதனையடுத்து உத்தியோகத்தர்களுடனான கலந்துரையாடலும் பிரதேச செயலகத்தின் மண்டபத்தில் இடம்பெற்றிருந்தது.
இ. பிரதாபன் முன்னாள் வட மாகாணசபை உறுப்பினர் ஆர். இந்திரராசாவின் மகனாவார்.