மல்லாவி பகுதியிலிருந்து வவுனியா நோக்கிப் பயணித்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான பாலசுந்தரராஜா பிரபாகரன் (வயது-50) என்பவரை காணவில்லை என அவரின் மனைவி மல்லாவி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு மேற்கொண்டுள்ளார்.
முல்லைத்தீவு மாவட்டம் பாலிநகர் வவுனிக்குளம் பகுதியில் வசித்து வரும் மூன்று பிள்ளைகளின் தந்தையான பிரபா என அழைக்கப்படும் பாலசுந்தரராஜா பிரபாகரன் என்ற வர்த்தகர் கடந்த புதன்கிழமை மல்லாவியிலிருந்து வவுனியாவுக்கு செல்வதாகத் தெரிவித்து சென்ற நிலையில் இதுவரை அவர் வீடு திரும்பவில்லை.