வவுனியாவில் ஊரடங்கு சட்டம் இன்று தளர்த்தப்பட்டிருந்தது. இதனையடுத்து பொதுமக்கள் பொருட்களை கொள்வனவு செய்வதற்கு வவுனியா நகரிற்கு அதிகமாக வருகைதந்தனர்.
இந்நிலையில் வவுனியா மில் வீதியில் அமைந்துள்ள வர்த்தக நிலையம் ஒன்றால் மரக்கறிவகைகள் பொதுமக்களுக்கு இலவசமாக வினியோகிக்கப்பட்டது.
இதேவளை வங்கிகள்மற்றும்,வவுனியா பொதுவைத்தியசாலைக்கு இன்றயதினம் அதிகளவான பொதுமக்கள் வருகைதந்திருந்தநிலையில் வரிசையில் நின்று தமது சேவைகளை பூர்த்திசெய்திருந்தமை குறிப்பிடதக்கது.