வன்னி மாவட்ட வேட்பாளர் பட்டியல் பூர்த்தி

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் வன்னித் தேர்தல் மாவட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களும் தேர்வுசெய்யப்பட்டுள்னர். பழைய முகங்களே மீண்டும் களமிங்குகின்றன.

வன்னித் தேர்தல் மாவட்டத்தை உள்ளடக்கிய வவுனியா, முல்லைத்தீவு, மன்னார் ஆகிய பகுதிகளில் இலங்கை தமிழரசு கட்சியில் சார்ல்ஸ் நிர்மலநாதன்,
சிவப்பிரகாசம் சிவமோகன், சாந்தி ஸ்ரீகந்தராசா, பத்மநாதன் சத்தியலிங்கம் ஆகியோரும், தமிழீழ விடுதலை இயக்கத்தில் (ரெலோவில்) செல்வம் அடைக்கலநாதன், வினோ நோதராதலிங்கம், செந்தில்நாதன் மயூரன், தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்) சார்பில் கந்தர் தாமோதரம்பிள்ளை லிங்கநாதன், கந்தையா சிவலிங்கம் ஆகியோர் போட்டியிடுவர் என அறியமுடிகிறது.

ரெலோவில் போட்டியிடும்மூன்றாவது வேட்பாளர் இதுவரை தேர்வுசெய்யபடாத நிலையில் முன்னாள் வடக்குமாகாண சபை உறுப்பினர் செந்தில்நாதன்
மயூரனை வேட்பாளராக நியமிக்க கட்சியின் தலைமை குழு தீர்மானித்துள்ளதுடன் அதனை மயூரன் ஏற்றுகொண்டுள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.