“வட்டுக்கோட்டை 50, ஆண்டு விழா”. திட்மிட்டு புறக்கணித்த தமிழ்த்தேசிய கட்சிகள்! | பா.அரியநேத்திரன்

1949, டிசம்பர்,18, தொடக்கம் 1976,மே,14, வரையும் தந்தை செல்வா, இலங்கை தமிழரசுக்கட்சி கொள்கை சமஷ்டி கொள்கைதான்!
1976, மே,14, தொடக்கம் 1977, ஏப்ரல்,26, வரை தந்தை செல்வா இறக்கும்வரை தந்தை செல்வாவின் கொள்கை இலங்கை தமிழரசுக்கட்சி கொள்கை வட்டுக்கோட்டை தீர்மானம். அதுவே தந்தை செல்வா மரணித்த பின்னரும் 1977, யூலை 21, ல் மக்கள் ஆணை பெற்று இன்றுவரை 50, ஆண்டுகளாக இலங்கைத்தமிழ் அரசுக்கட்சியும், ஏனைய தமிழ்த்தேசிய கட்சிகளும் கடைப்பிடித்து வரும் கொள் கையாகும். இதுவரை அந்த கொள்கையை எந்த கட்சிகளும் மீளப்பெறவில்லை.
வட்டுக்கோட்டைத் தீர்மானம் 1976 ஆம் ஆண்டு மே மாதம் 14ஆம் திகதி வட்டுக்கோட்டை பண்ணாகம் மெய்கண்டான் வித்தியாலயத்தில் இடம் பெற்ற தமிழர் விடுதலைக் கூட்டணியின் முதலாவது மாநாட்டில் நிறை வேற்றப்பட்டது. 1972 ஆம் ஆண்டு திருகோணமலையில் உருவாக்கப்பட்ட தமிழர் கூட்டணி தமிழர் விடுதலைக் கூட்டணியாக பெயர் மாற்றம் செய்யப்பட்டமையும் இந்த மாநாட்டிலேயே இடம்பெற்றது.
வட்டுக்கோட்டை தீர்மானத்தின் 50 வது வருட நினைவு நிகழ்வுகள் வடக்கு,கிழக்கு எங்கும் நிகழ்த்தப் பட்டன. இதன் இறுதி நிகழ்வு “வட்டுக்கோட்டை 50 எழுச்சிமாநாடு” என்ற தலைப்பில் கடந்த 20/06/2026, சனிக் கிழமை யாழ்ப்பாணம் தந்தை செல்வா அரங்கில் நடாத் தப்பட்டது.
பல்வேறு சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகளும், மதத்தலைவர்களும் வட்டுக்கோட்டைத் தீரமானம் பற்றிய தங்கள் கருத்துக்களை முன்வைத்திருந்தனர். வடக்கு கிழக்கு எட்டுமாவட்டங்களில் இருந்தும் பெரும் திரளான பொதுமக்கள் கலந்துகொண்டிருந்தனர்.
வட்டுக்கோட்டை தீர்மானம் ஒரு அரசியல் ஆவ ணம் மட்டுமல்ல, இது ஒரு தேசிய இனத்தின் அரசியல் உணர்வின் வெளிப்பாடு. தலைமுறைகளின் தியாகங்க ளால் வடிவமைக்கப்பட்ட ஒரு தேசியப் பிரகடனம் என வட்டுக்கோட்டை 50 எழுச்சி மாநாட்டு உரையில் அதன் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான அருட்பணி க. ஜெகதாஸ் அடிகளார் தொடக்க உரையில் குறிப்பிடப்பட்டார்.
பல தசாப்தங்களாக தமிழர்கள் சமத்துவம், மொழி உரிமை, கல்வி உரிமை, நில உரிமை மற்றும் அரசியல் பங்குபற்றலுக்காக ஜனநாயக வழிகளில் போராடினர். ஆனால் ஒவ்வொரு முறையும் அவர்கள் எதிர்கொண்டது மறுப்பையும் ஒடுக்குமுறையையும், சிங்கள ஏகாதிபத்தியத்தின் வன்முறையையும்தான் வட்டுக் கோட்டைத் தீர்மானம் தோன்றுவதற்கு காரண மாக அமைந்தது என வட்டுக்கோட்டை 50, விழா ஒருங்கி ணைப்பாளர் தலைவர் தவத்திரு வேலன் சுவாமி நிறைவுரையில் குறிப்பிட்டார்.
வட்டுக்கோட்டை தீர்மானம் பற்றி பேசுவதிலோ, அந்த நிகழ்வுகளில் கலந்து கொள்வதிலிலோ சட்டரீதியி லான எந்தத்தடைகளும் இல்லை என தமிழ் மக்கள் கூட்டணி கட்சியின் செயற்குழு உறுப்பினரும் சட்டத்தரணியுமான மணிவண்ணன் இடை உரையில் குறிப்பிட்டார்.
வட்டுக்கோட்டை தீர்மானமானத்தின் தந்தை இலங்கைத்தமிழ் அரசுக்கட்சியின் நிறுவுனர் தலைவரான தந்தை செல்வாவா என்பது எல்லோரும் அறிந்த ஒன்றுதான். அவர் தமிழர் விடுதலை கூட்டணி என்ற அரசியல் கட்சி ஊடாக தன்னால் முன்மொழியப்பட்டு தமிழரசுக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான மூ. சிவசிதம்பரம் அவர்களால் வழிமொழியப்பட்டபிரகடனமே வட்டுக்கோட்டை தீர்மானமாகும்.
வட்டுக்கோட்டை தீர்மானம் 50, ஆண்டுகள் கடந்தும் அந்த தீர்மானம் இதுவரை எந்த ஒரு தமிழ்தேசிய கட்சியாலும் மீளப்பெறாத வடகிழக்கு தமிழ் மக்களின் ஆணை பெற்ற தீர்மானமாக கருதப்படுகிறது இந்த தீர்மானத்தின் முக்கிய பங்கு இலங்கைத்தமிழ் அரசுக்கட்சியினுடையது என்பது யாவரும் அறிந்த ஒன்று. வட்டுக்கோட்டை தீர்மானம் எடுக்கும் போது இலங்கை தமிழரசுக்கட்சி உறுப்பினர்கள் யாவரும் தமிழர் விடுதலை கூட்டணியில் உறுப்பினர்களாகவே கருதப்பட்டனர் அதனால் தமிழர் விடுதலை கூட்டணி தலைவர் தந்தை செல்வா, அகில இலங்கை தமிழ் காங்கிரஷ் தலைவர் ஜீ ஜீ பொன்னம்பலம், இலங்கை தொழிலாளர் காங்கிரஷ் தலைவர் சௌமிய மூர்த்தி தொண்டமான் ஆகியோர் இணைந்து வட்டுக்கோட்டை தீர்மானம் 1976,மே,14, வெள்ளிக்கிழமை எடுத்ததனர் என்பது சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானமாகும்.                                          அந்த தீர்மானம் எடுத்து ஆறு மாதங்களுக்கு  பின்னர் 1976, நவம்பர்,19, வெள்ளிக்கிழமை பாராளுமன்றில் தந்தை செல்வா அந்த தீர்மானம் தொடர்பாக உரை ஆற்றியிருந்தார் இதுவே தந்தை செல்வாவின் பாராளுமன்றஇறுதி உரை அந்த உரையானது..
“தமிழ்பேசும் மக்களின் இழந்த உரிமையை மீட்பதற்காக சமஷ்டி ஆட்சிகோரி ஒரு இயக்கத்தை ஆரம்பித் தோம். சமஷ்டி ஆட்சிமூலம் நமது இலட்சியத்தை நிறைவேற்றிக்கொள்ள முடியாது என்பதை இப்போது அறிந்து கொண்டோம். இந்த அனுபவத்தைக்கொண்டே நாங்கள் பிரிந்து செல்ல வேண்டும் என்ற முடிவுக்கு வந்துள்ளோம்.
நாங்கள் பிரிந்து செல்லாவிட்டால் எங்கள் இழந்த உரிமைகளை ஒருபோதும் மீட்க முடியாது. நாங்கள் கோருவது உண்மையில் பிரிவினை அல்ல இழந்த அரச உடைமையை மீள அமைக்கவே போராடுகின்றோம்” எங்கள் கட்சி ஒரு தனியாட்சியை நிறுவும் நோக்கத்துடன் செயல் பட்டு வருகிறது. இது இலேசான காரியம் இல்லை என்பது எங்களுக்கு தெரியும் இது வில்லங்கமான பாதை என்பதை நாம் உணர்கிறோம்.
ஆனால் நாங்கள் சிங்களவர் ஆட்சியில் இருந்து விடுபட வேண்டும் என்ற சிந்தனையைடனே  செயல் பட்டுவருகிறோம் எனவே முழுமூச்சுடன் செயல்பட்டு எமது அரசை அமைப்போம்.
நாங்கள் அயரிஷ் மக்களை போல சுதந்திரமான நாட்டை கோருகிறோம் இதற்கு சிங்களவர் மறுப்பதற்கு எதுவித நியாயமும் இல்லை.ஒருநாள் எங்களின் நியாயமான கோரிக்கைக்கு இணங்கியே தீர வேண்டிய நிலை ஏற்பட்டே தீரும்.நாங்கள் ஏனைய பகுதிகளில் இருந்து பிரிந்து எங்கள் தமிழ் நாட்டை அமைத்தே தீருவோம்” இப்படி தந்தை செல்வாவின் பாராளுமன்ற உரை அமைந்திருந்து.
வட்டுக்கோட்டை தீர்மானத்துக்குப் பின்னர் அகில இலங்கை தமிழ் காங்கிறஸ் தலைவர்     ஜீ ஜீ பொன்னம்பலம் 1977, பெப்பரவரி,09, ல் மரணித்துவிட்டார், தந்தை செல்வா 1977, ஏப்ரல்,26, ல் மரணித்து விட்டார், இருவரும் மரணித்த பின்புதான் நாடாளுமன்ற தேர்தல் 1977, யூலை,21.ல் இடம்பெற்றது அந்த தேர்தலில் வட்டுக்கோட்டை தீர்மானம் மக்கள் ஆணையாக தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்டு தமிழர் விடுதலை கூட்டணி வடகிழக்கில் 23, தொகுதிகளில் 24, வேட்பாளர்களை தொகுதிரீதியாக போட்டியிடவைத்து  18, பாராளுமன்ற உறுப்பினர்கள் வெற்றிபெற்று எதிர்கட்சி தலைவராக அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கமும் தெரிவானார்.
ஆனால் வட்டுக்கோட்டை தீர்மானத்துக்கு ஆதரவு கொடுத்த அகில இலங்கை தமிழ் காங்கிரஸ்  மக்கள் ஆணை தேர்தலில் தமிழர் விடுதலை கூட்டணிக்கு எதிராக யாழ் குடாநாட்டில் அமரத்துவம் அடைந்த ஜீ ஜீ பொன்னம்பலத்தின் மகன் குமார் பொன்னம்பலம் அகில இலங்கை தமிழ் காங்கீரஸ் தலைமையில் சுயேட்சையாக வேட்பாளர்களை நிறுத்தி தோல்வி கண்டனர்.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் சௌமியமூர்த்தி தொண்டமான் மலையக அரசியலில் புவிசார் நிலைமையை கருத்தில் கொண்டு வட்டுக் கோட்டை தீர்மானம் மலையகத்துக்கு ஒவ்வாமை என்பதால் வட்டுக்கோட்டை தீர்மானத்தை முன்னிறுத்தி மலையகத்தில் தேர்தலில் போட்டியிடவில்லை ஆனால் அவர் மலையகத்தில் சேவல் கூவும்போது வடகிழக்கில் சூரியன் உதிக்கும் என்ற பிரசாரத்தை வட்டுக்கோட்டை தீர்மானத்துக்கு ஆதரவாக முன்னெடுத்தார். சேவல் சின்னம் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சி சின்னம், உதயசூரியன் தமிழர் விடுதலை கூட்டணி் சின்னம் என்பதால் அவ்வாறு அவரின் பிரசாரம் மலையக மக்களை தட்டி எழுப்பியது.
முஸ்லிம் தொகுதிகளில் வட்டுக்கோட்டை தீர் மானம் தோல்வி. வடகிழக்கில் கல்முனை தொகுதி ஏ. எம். சம்சுதீன், சம்மாந்துறை தொகுதி, எச். எல். எம். ஹாசீம், மூதூர் தொகுதி,எஸ். எம். மக்கீன், புத்தளம் தொகுதி டாக்டர் இலியாஸ் கல்முனை, ஆகிய நான்கு தொகுதிகளிலும் தமிழர் விடுதலை கூட்டணியால் வட்டுக்கோட்டை தீர்மா னத்தை முன்னிறுத்தி நான்கு முஸ்லிம் வேட்பாளர்கள் போட்டியிட்டபோதும் நால்வருமே தோல்வியடைந்தனர் இதனால் முஸ்லிம் மக்கள் வட்டுக்கோட்டை தீர்மானத்தை ஏற்கவில்லை என்பது இதன்மூலம் நிருபணமானது.
அதற்கான காரணமும் தமிழர் விடுதலை கூட் டணி தலைவர் அ.அமிர்தலிங்கம் மட்டக்களப்பு இரட்டை அங்கத்தவர் தொகுதியில் இரண்டு தமிழர்களை ஒரே கொள்கையில் நிறுத்து முஸ்லிம் பிரதிநித்துவத்தை தட்டிப் பறிக்க எத்தனித்தார் என்ற குற்றச்சாட்டே முஸ்லிம்மக்கள் வட்டுக்கோட்டை தீர்மானத்துக்கு ஆதரவு வழங்காமை என்பதே உண்மை.
இவ்வாறான வரலாற்று பின்னணி கொண்ட தீர்மானம் நிறைவேறிய 50, வது பொன்விழா கடந்த 2026, மே,14, அன்றாகும் அதன் எழுச்சி மகாநாடுதான் கடந்த 2026, யூன்,20,ல் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. இந்த மகாநாட்டில் தற்போது தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியாக அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியை பிரதிநித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், மேனாள் பா.உ கஜேந்திரன், தமிழ்தேசிய பசுமை இயக்கம் ஐங்கரநேசன், தமிழ் மக்கள் கூட்டணி சட்டத்தரணி மணி வண்ணன்,  உட்பட சில கட்சி உறுப்பினர்கள்  சமூகம் கொடுத்திருந்தனர் ஆனால் தமிழ்தேசிய கட்சிகளாக தம்மை அடையாளப்படுத்தம் பல கட்சிகள் வடக்கு கிழக்கில் இருந்து கடந்த 2024, நவம்பர்,14, ல் இடம்பெற்ற பொதுத்தேர்தலில் 10, தமிழ்தேசிய பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவாகி இருந்தனர் அவர்களில் ஒரேயொரு பாராளுமன்ற உறுப்பினர் மட்டுமே சமூகம் கொடுத்திருந்தார் ஏனைய 09, பாராளுமன்ற உறுப்பினர்களும் இந்த விழாவில் முகத்தை காட்டவில்லை புறக்கணித்தனர். காரணம் ஏன் என்பது வெளியில் கூறக்கூட முடியாமல் விழுங்கிக்கொண்டனர்.
தேர்தல் காலங்களில் உணர்சிபூர்வமாக வட்டுக் கோட்டை தீர்மானம், தந்தை செல்வா, தலைவர் மேதகு. ஆயுதப்போர், மாவீரர்கள், தியாகம், என வீரவசனம் பேசி தமிழ்மக்களிடம் வாக்குகளை பெற்ற இவர்கள் வட்டுக் கோட்டை 50, எழுச்சி விழாவை புறக்கணித்தன் மூலம் இனியும்  தேர்ல்களில் என்ன முகத்துடன் மக்களிடம் வாக்கு கேட்டு பிரசாரம் செய்வார்கள் என்பதே மக்களுக்கு எழுந்து ள்ள கேள்விகள்
கொள்கைக்காக வாக்களியுங்கள் என்றால் என்ன கொள்கை அபிவிருத்தி கொள்கை என்றால் தமிழ்த்தேசி கட்சிகளை ஏன் ஆதரிக்க வேண்டும் ஆளும் தரப்பை ஆதரிக்கலாம் அல்லவா? இதில் கவனிக்கவேண்டியது இலங்கை தமிழ் அரசுக்கட்சிதான் வட்டுக்கோட்டை தீர்மா னத்தின் தாய்க்கட்சி அந்த கட்சியானது 1976, மே,14, ல் எடுத்த வட்டுக்கோட்டை தீர்மானத்தை மீளவும் 32, ஆண்டுகள் கடந்து 2008, ஏப்ரல் ,24, ல், யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற இலங்கைத்தமிழ் அரசுக்கட்சியின் பொதுச்சபை கூட்டத்தில் ஏகமனதாக ஒரு மீளவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உறுதிப் படுத்தப்பட்டது அது யாதெனில் “ 1976, மே,14 திகதி யிலிருந்து தமிழர் ஐக்கிய விடுதலை கூட்டணியாலும், இலங்கைத்தமிழ் அரசுக்கட்சியாலும் எடுக்கப்பட்ட தீர்மானங்களையும்,நடவடிக்கைகளையும் அங்கீகரிப்பதென இலங்கைத்தமிழ் அரசுக்கட்சியின் பொதுக்குழு 24.04.2008, ல், தீர்மானித்துள்ளது”
இப்படி அந்த தீர்மானம் அன்று நிறைவேற்றப்பட்டு அது இலங்கைத்தமிழ் அரசுக்கட்சி உபவிதி 17, ம் பிரிவில் (ஈ) பந்தியில் எழுதப்பட்டுள்ளது. இவ்வாறு தெளிவாக மீளவும் வட்டுக்கோட்டை தீர்மானத்தை 2008, ஏப்ரல்,24, பொதுச்சபை கூட்டத்தில் ஏற்றுக்கொண்ட இலங்கைத்தமிழ் அரசுக்கட்சி 2026, மே,14, ல் வட்டுக்கோட்டை 50, ஆண்டு நிகழ்வை புறக்கணித்தது ஏன்? அல்லது அது தொடர்பாக மௌனம் காத்தது ஏன்? இதற்கு அந்த கட்சியில் உள்ள எந்தவொரு பாராளுமன்ற உறுப்பினர்களோ அல்லது கட்சி பதில் பதவிகளை கொண்ட தலைமைகளோ இதுவரை பதில் கூறவில்லை.
இதில் சிந்திக்கவேண்டியது விடுதலைப்புலிகளின் மௌனத்திற்கு பின்னர் 2010,ஏப்ரல்,08, ல் இடம்பெற்ற பொதுத்தேர்தலுக்குப்பின்னர் 17, வருடங்களாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பும் அதில் அங்கம் வகித்த கட்சிகளும் தடம்மாறி கொள்கைமாறி செல்வதையே இவர்களுடைய செயல்பாடுகள் நிரூபிக்கின்றன.
வட்டுக்கோட்டை 50, விழா ஏற்பாட்டாளர்கள் சகல கட்சிகளுக்கும், சகல தமிழ்தேசிய கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் அழைப்புகள் வழங்கப்பட்டதாக தெரி வித்தனர். அனேகமானவர்கள் விழாவுக்கு வருவதா கவே கூறியிருந்தனர் எனவும் ஏற்பாட்டாளர்கள் தெரிவித் தனர் ஏன் இதில் கலந்து கொள்ளவில்லை என்பதை மக்களுக்கு கூறும் கடப்பாடு அவர்களுக்கு உண்டு.
ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணியால் ரெலோ சார்பாக தெரிவான ஒரேயொரு பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனும் இந்த நிகழ்வில் சமூகம் கொடுக்கவில்லை அதற்கான காரணமும் இதுவரை அறிய முடியவில்லை.
உண்மையில் வட்டுக்கோட்டை தீர்மானத்துக்கு கட்டுப்பட்டவர்களாகவே ஈழத்தமிழர் விடுதலைக்காக இலங்கையில் செயல்படும் தமிழ்த்தேசிய அரசியல் கட்சிகள் அனைத்தும். புலம் பெயர் நாடுகளில் செயல்படும் அமைப்புகளும் வெவ்வேறு பெயர்களில் தமது அரசியல் பணிகளை முன்னெடுக்கின்றனர் என்பதே உண்மை.
எந்த ஒரு தமிழ்த்தேசிய கட்சிகளும் தாம் வட்டுக் கோட்டை தீர்மானத்துக்கு உடன்படவில்லை அல்லது அதனை மீளப்பெற்றுவிட்டோம் என இதுவரை கூறவில்லை முடிந்தால் வெளிப்படையாக அப்படி அவர்களால் கூறமுடியுமா.?