வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் கோவிலுக்கு அண்மையில் நேற்று இடம்பெற்ற குண்டுவெடிப்புத் தாக்குதல் சந்தேகத்தின் அடிப்படையில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் எனத் தெரியவருகின்றது.
கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் வந்த விசேட குற்றத்தடுப்புப் பிரிவினர் மேற்கொண்ட விசாரணையின் அடிப்படையிலேயே அந்த நபர் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
துன்னாலை குடவத்தை என்ற பகுதியைச் சேர்ந்த ஒருவரே கைது செய்யப்பட்டு மேலதிகவிசாரணைக்காக யாழ்ப்பாணம் கொண்டு செல்லப்பட்டுள்ளார் எனத் தெரியவருகிறது.
இதனிடையே மற்றுமொரு நபரை கைது செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும் அந்த நபர் தலைமறைவாகியிருக்கிறார் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.