வடக்கு மாகாணத்தில் 34 சுயேச்சைகள் கட்டுப்பணம்.

ஏப்ரல் மாதம் 25ஆம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்காக இதுவரை இலங்கை முழுவதும் 150 சுயேச்சைக் குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளன.

யாழ்ப்பாணத்தில் 16 குழுக்களும், வன்னியில் 18 குழுக்களும் கட்டுப் பணம் செலுத்தியுள்ளன.

இலங்கையில் வன்னி மாவட்டத்திலேயே அதிகளவான சுயேச்சைக் குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளன.

யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தில் நேற்று மாத்திரம் 2 சுயேச்சைக் குழுக்களும், வன்னியில் ஒரு சுயேச்சைக் குழுவும் கட்டுப்பணம் செலுத்தியுள்ளன.