வடக்கு மாகாணத்தின் முதலமைச்சர் வேட்பாளராக மாவை தெரிவு

வடக்கு மாகாணத்தின் முதலமைச்சர் வேட்பாளராக தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவை களமிறக்க வேண்டும் என தமிழரசுக் கட்சியின் உயர்மட்டக்குழு தீர்மானித்துள்ளது.

இலங்கை தமிழரசுக் கட்சியின் உயர்மட்டக்குழுவின் கலந்துரையாடல் இன்று வவுனியாவில் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் தமிழ்த் தேசியத் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீரதன் வடக்கு மாகாணத்தின் முதலமைச்சர் வேட்பாளராக தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவே போட்டியிட வேண்டும் என முன்மொழிந்த போது எவரும் அந்த தீர்மானத்தை எதிர்க்காததால் அந்த தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.