வடக்கின் புதிய ஆளுநர் சார்ள்ஸ் நாளை கடமையைப் பொறுப்பேற்பார்

வடக்கு மாகாணத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள திருமதி பி.எஸ்.எம். சார்ள்ஸ், நாளை 2ஆம் திகதி தமது கடமைகளை உத்தியோக பூர்வமாகப் பொறுப்பேற்கவுள்ளார்.

இலங்கை நிர்வாக சேவையின் விசேட தரஅதிகாரியான பி.எஸ்.எம்.சார்ள்ஸ், வடக்கு மாகாண ஆளுநராக நேற்று முன்தினம் ஜனாதிபதி கோட்டாபய ராஜ பக்ஷவின் முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

இந்த நிலையில், அவர், நாளை வியாழக்கிழமை தனது கடமைகளைத் தாம் பொறுப்பேற்கவுள்ளார் எனத் தெரிவித்தார்.