வசந்த கரன்னகொடவிற்கு ஜனாதிபதி ஆணைக்குழு அழைப்பு

சிறீலங்காவின் முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னகொடவிற்கு ஜனாதிபதி ஆணைக்குழு அழைப்பு விடுத்துள்ளது.

அதற்கமைய அவரை எதிர்வரும் 10ஆம் திகதி மாலை 3 மணிக்கு ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆணைக்குழுவுக்கு கிடைத்துள்ள முறைப்பாடுகள் தொடர்பாக வாக்குமூலம் பெற்றுக்கொள்ளவே அவர் அழைக் கப்பட்டுள்ளார்.

அதேபோல் கடற்படை கொமாண்டர் ஆர்.பி.எஸ்.ரணசிங்க மற்றும் லெப்டினன்ட் கொமாண்டர் எச்.எம்.பி.சி யஹட்டியராச்சி ஆகியோரும் அன்றைய தினம் பிற்பகல் 1 மணிக்கு ஆணைக் குழுவில் ஆஜராகுமாறு அழைக்கப்பட்டுள்ளனர்.