ராஜித சேனாரட்ண எங்கே? அவரது வீட்டில் சி.ஐ.டி.யினர் அதிரடித் தேடுதல்

பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ராஜித சேனாரத்னவை அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் காணவில்லை என்றும், குற்றப்புலனாய்வு பிரிவினர் அவரைத் தேடி விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்னவைக் கைது செய்ய கொழும்பு மேலதிக நீதவானால் நேற்று முன்தினம் பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதையடுத்து, குற்றப் புலனாய்வு அதிகாரிகள் நேற்று அவரைத் தேடி அவரது கொழும்பு இல்லத்துக்கும் அதையடுத்து களுத்துறை மாவட்டம் பேருவளையில் உள்ள அவரது சொந்த வீட்டுக்கும் சென்றனர் என்றும், ஆனால் அவர் அச்சமயம் அங்குஇல்லை என வீட்டில் தெரிவிக்கப்பட்டது என்றும் கூறப்பட்டது.