ரணிலுடன் இணக்கப்பாட்டுக்கு வருவதற்கு தயாராகும் பொது ஜன பெரமுன – பேச்சுவாா்த்தைக்கு வருமாறும் அழைப்பு

ஜனாதிபதி தேர்தலுக்கான ஆதரவை பெற்றுக்கொள்வது தொடர்பில் தமது கட்சியுடன் பிரத்தியேகமாக கலந்துரையாடி தீர்மானமொன்றுக்கு வருமாறு ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளது.

தாம் உள்ளிட்ட சிலர் ஏனைய சில கட்சிகளின் உறுப்பினர்களுடனும் ஜனாதிபதியுடனும் இடம்பெற்ற சந்திப்பின் போது இது தொடர்பில் அறிவித்ததாக ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் செயலாளர், பாராளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம் தெரிவித்தார்.

தமது கட்சியின் நிபந்தனைகளுக்கு ஜனாதிபதியின் இணக்கப்பாட்டைப் பொறுத்து எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் அவருக்கு ஆதரவு வழங்குவது தொடர்பில் தீர்மானம் மேற்கொள்ளப்படுமெனவும் அவர் கூறினார்.

ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற இந்த கலந்துரையாடலில் ஶ்ரீ லங்கா சுதந்திர கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி மஹிந்த அமரவீர, நிமல் சிறிபால டி சில்வா, பிரதமர் தினேஷ் குணவர்தன, நிமல் லன்சா, நளின் பெர்ணான்டோ உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தனர்.