யாழ்.மாவட்ட மேலதிக அரச அதிபராக மருதங்கேணி பிரதேச செயலராக இருந்த திரு கனகசபாபதி கனகேஸ்வரன் இன்று முதல் பொறுப்பேற்றுக் கொண்டார்.
இதுவரை யாழ்.மாவட்ட மேலதிக அரச அதிபராக இருந்த திருமதி சுகுணரதி தெய்வேந்திரம், தேசிய சுகவாழ்வு, கலந்துரையாடல், அரசகரும மொழிகள் மற்றும் இந்து விவகார அமைச்சில் தனது கடமைகளை பொறுப்பேற்றுள்ளார்.
இதேவேளை மருதங்கேணி பிரதேச செயலகத்திற்கு யாரையும் நிரந்தரமாக நியமிக்காத காரணத்தால், பருத்தித்துறை பிரதேச செயலர் திரு ஆழ்வாப்பிள்ளை சிறி, மேலதிக பொறுப்பெடுத்துள்ளார் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை இலங்கை நிர்வாக சேவையின், அதிவிசேட தரத்தில் 78ஆவது இடத்திலிருக்கும் யாழ். மாவட்ட அரச அதிபர் திரு வேதநாயகன், வரும் 2020 மே மாதம் ஓய்வுபெறவுள்ளதால், அடுத்த அரச அதிபருக்கான பெயர் கோரல்கள் வேண்டப்படுகின்றன.